பதிவு செய்த நாள்
04
ஆக
2020
10:08
தஞ்சாவூர்; உ.பி., மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, நாளை பூமி பூஜை நடக்கிறது. இதற்காக, ஒவ்வொரு பகுதியிலிருந்தும் புனித நீர், செங்கல் உள்ளிட்டவை அனுப்பப்பட்டு வருகின்றன.தஞ்சாவூர் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், பெரிய கோவில் அருகே சிவகங்கை பூங்காவிலுள்ள, மன்னர் ராஜராஜ சோழன் காலத்தில் வெட்டப்பட்ட குளத்திலிருந்து புனித நீரும், திருவையாறு காவிரியில் மணலும் எடுக்கப்பட்டன.இவை, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் மூலம், அயோத்தி ராமர் கோவிலுக்கு நேற்று, தபாலில் அனுப்பி வைக்கப்பட்டன.