Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி சனி சிறப்பு பூஜை: ... மத உறுதி பத்திர கையெழுத்து: ரத்து செய்ய திருப்பதியில் முடிவு மத உறுதி பத்திர கையெழுத்து: ரத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி சனி: காரைக்குடி பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
புரட்டாசி சனி: காரைக்குடி பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

20 செப்
2020
03:09

 காரைக்குடி : அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில்,புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

‛தென் திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு அலங்கார ஆராதனை நடக்கும். நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, காலை 4:00 மணிக்கு சுப்பிரபாதம், காலசந்தி பூஜை நடைபெற்று காலை 5:30 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் தங்க அங்கி அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.கோயில்கள் அனைத்திலும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை செயல்அலுவலர் தமிழ்ச்செல்வி, அறங்காவலர் குழு தலைவர் ராம அழகம்மை ஆச்சி செய்திருந்தனர்.

திருப்புத்துார்: கொங்கரத்தி வண்புகழ் நாராயணப் பெருமாள் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் துவங்கியது. மூலவருக்கு அபிேஷகம், ஆராதனை நடந்தன. தொடர்ந்துஉத்ஸவர் பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் சர்வ அலங்காரத்தில் மூலவர் சன்னதி முன்பாக அருள்பாலித்தார். சுற்று வட்டார கிராமங்களிலிருந்து பக்தர்கள் தரிசித்து சென்றனர்.திருப்புத்துார் ஸ்ரீதேவி பூதேவி சமேத நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் மூலவருக்கு காலை 6:00 மணிக்கு அபிேஷக,ஆராதனை நடந்து நின்ற கோலத்தில் அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவரை பக்தர்கள் தரிசித்தனர்.திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் காலை 6:00 மணி முதல் பக்தர்கள் வருகை துவங்கியது.

காலை 7:00 மணிக்கு மூலவர் சன்னதியில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் பங்கேற்பின்றி சித்திரைத் திருவிழா நடைபெறுவதால் பள்ளியறையிலிருந்து சக்கரத்தாழ்வார் சன்னதியில் உத்ஸவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில்களில் பக்தர்களுக்கு சானிடைஸர் வழங்கப்பட்டது. முகக்கவசம் அணிய அறிவுறுத்தினர்.கொங்கரத்தியில் முகக்கவசம் இல்லாதவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. சிவகங்கை: சிவகங்கை ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள்கோயிலில் அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம்நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுந்தரராஜ பெருமாள் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயிலில் முக கவசம் அணிந்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி கார்த்திக் சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; வைகாசி உற்சவ விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் தீர்த்த குளத்தை சுற்றி வலம் ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா, 13 ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் நேற்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar