Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை விழா நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை: பக்தர்கள் தரிசனம் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் குளத்தில் மீன்கள் இறப்பதால் பக்தர்கள் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2020
03:09

 திண்டிவனம்; இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள குளத்தில் தண்ணீர் வற்றி, மீன்கள் செத்து மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். புதுச்சேரி--திண்டிவனம் சாலையில் மொரட்டாண்டி டோல்கேட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் பிரசித்தி பெற்ற இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு எதிரிலேயே 20 அடிக்கு மேல் ஆழமுள்ள குளம் உள்ளது.கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் குளத்திற்கு சென்று வருவதும், மீன்களுக்கு உணவு அளிப்பதும் வழக்கம்.கடந்தாண்டு பெய்த மழையில் எதிர்பார்க்காத அளவிற்கு குளத்தில் நீர் நிரம்பியது. இந்த குளத்தில் ஏராளமான மீன்கள் வளர்ந்து வருகிறது. இந்த கோவில் நிர்வாகம், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.கொரோனா நோய் தொற்று காரணமாக, பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாததால், கோவில் வளாகம் பராமரிக்கப்படவில்லை. கடந்த காலங்களில், அப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடன், குளத்தில் தண்ணீர் வற்றாமல் இருக்க நீர் மோட்டார் மூலம், தண்ணீர் நிரப்பப்பட்டு வந்தது.தற்போது, பல்வேறு பிரச்னைகள் காரணமாக, கோவில் குளம் பராமரிக்கப்படாமல் உள்ளது.கோவில் திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது குளம் வற்றி வருவதையும், மீன்கள் இறந்து வருவதையும் பக்தர்கள் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே குளத்தில் நீர் மோட்டார் மூலம் தண்ணீரை நிரப்பி, மீன்கள் இறப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, 2,668 அடி உயர ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே 2500 அடி உயர பிரான்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.பாரி ஆண்ட ... மேலும்
 
temple news
மேலூர்; நரசிங்கம்பட்டியில் திருகார்த்திகையை முன்னிட்டு மண்ணை மலையாக்கும் விநோத திருவிழாவில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 24ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar