பதிவு செய்த நாள்
22
செப்
2020
04:09
ஊக்கப்படுத்துகிறார் சாரதாதேவியார்
* எந்த சூழலில் மகிழ்ச்சியுடன் இருக்கும் விதத்தில் மனதை மாற்றிக் கொள்.
* கோபம் கண்ணை மறைக்கும். அப்போது அறிவுக்கு வேலை கொடு.
* தியானத்தில் ஈடுபடுபட்டால் அமைதியுடன் வாழலாம்.
* பக்தியை தவிர வேறு எதையும் கடவுள் எதிர்பார்ப்பதில்லை.
* பிறரிடம் உள்ள குற்றத்தையே சிந்தித்தால் குற்றவாளி ஆகி விடுவாய்.
* வாழ்வில் எந்தளவுக்கு பற்று குறைகிறதோ, அந்தளவுக்கு நிம்மதி கிடைக்கும்.
* மனதில் துாய்மை இருந்தால் பார்க்கும் காட்சியிலும் துாய்மை தெரியும்.
* ஆன்மிகத்தில் சாதனை படைக்க இளமைக்காலமே ஏற்றது.
* நம்பிக்கையுடன் பாடுபட்டால் எல்லாம் நன்மையாக நடக்கும்.
* யாரையும், எந்த வேலையையும் துச்சமாக கருதக் கூடாது.
* பிரச்னை அனைத்திற்கும் பணமே அடிப்படை காரணம்.
* பணம் மனதை சஞ்சலப்படுத்தி பாவம் செய்யத் துண்டுகிறது.
* நம்பிக்கையும், மன உறுதியும் வாழ்வின் அடிப்படை அம்சங்கள்.
* துறவு மனப்பான்மை இல்லாவிட்டால் பணத்தின் மீதுள்ள மயக்கம் தீராது.
* மனதை துாய்மைபடுத்தும் சக்தி கடவுளின் திருநாமத்திற்கு உண்டு.
* கடவுள் ஒருவர் மட்டுமே உண்மை. மற்றவை எல்லாம் பொய்.