Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொரோனா நீங்க வராகி கோவிலில் 68 ... காரமடை அரங்கநாதர் கோவில் மூன்று வாரங்களுக்கு அடைப்பு காரமடை அரங்கநாதர் கோவில் மூன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருஞானசம்பந்தநல்லூரான தனிச்சியம் பாகனூரான சோழவந்தான்: மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டில் தகவல்
எழுத்தின் அளவு:
திருஞானசம்பந்தநல்லூரான தனிச்சியம் பாகனூரான சோழவந்தான்: மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டில் தகவல்

பதிவு செய்த நாள்

02 அக்
2020
05:10

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள 410 கல்வெட்டுகளில் ஊர்களின் பெயர்கள் சில மருவி வேறு பெயர்களில் இன்று அழைக்கப்படுவது தெரிய வந்துள்ளது. இக்கோயிலில் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் தலைமையில் குழுவினர் ஓராண்டாக கல்வெட்டுகளை ஆய்வு செய்தனர். கி.பி.13ம் நுாற்றாண்டில் தற்போதைய கோயில் கல்கட்டுமான பணி நடந்தது தெரிய வந்தது. மன்னர்கள் கோயிலுக்கு செய்த சேவை, பூஜைகள் தடையின்றி நடக்க நிலங்கள் கொடுக்கப்பட்ட விபரங்களை தான் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

இதில் தற்போதைய சில ஊர்களின் பெயர் கல்வெட்டுகளில் வேறு பெயர்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தனிச்சியம், திருஞானசம்பந்தநல்லுார் என்றும், சோழவந்தான் சோழகுலாந்தக சதுர்வேதி மங்கலம் என்றும், கொடிமங்கலம் முடிகொண்ட சோழசதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. சாந்தலிங்கம் கூறியதாவது: தனிச்சியத்தின் ஆதிகாலத்து பெயரே அதுதான். அதன் ஒருபகுதி திருஞானசம்பந்தநல்லுார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரையில் அவர் மடம் ஒன்றை (மதுரை ஆதினம் மடம்) ஆரம்பித்தார். இதற்காக நிலங்கள் வழங்கப்பட்டன. அப்படி வழங்கப் பட்ட பகுதிக்கு அவரது பெயரை சூட்டியுள்ளனர். சோழவந்தானின் ஆதிகாலத்து பெயர் பாகனுார். இதுதொடர்பான கல்வெட்டு செக்கானுாரணி அருகே கொங்கர் புளியங்குளத்தில் தமிழ் பிராமி கல்வெட்டில் உள்ளது. வீரபாண்டியன் என்ற மன்னன் கி.பி. 946 - 966 வரை மதுரையை ஆண்டான். சோழநாட்டில் படையெடுத்து உத்தமசீலி என்ற சிற்றரசனை வென்று தலையை வெட்டினான். இதனால் சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் என்று அழைக்கப்பட்டான். சோழர் குலத்திற்கு அழிவை ஏற்படுத்தியதால் சோழகுலாந்தகன் என்ற பெயரும் ஏற்பட்டது.தற்போதைய சோழவந்தான் பகுதியை பிராமணர்களுக்கு ஒதுக்கி கொடுத்து அதற்கு சோழசதுர்வேதி மங்கலம் என்று தன் பட்டப்பெயரை சூட்டினான். அதுவே தற்போது மருவி சோழவந்தான் ஆனது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு யாக பூஜை நடைபெற்றது. பழநி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar