Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அப்பண்ணாச்சாரியார் அருளிய ... துளசிமாடம் வைத்து வழிபடுவதால் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கோபத்தை மறந்தால் சொர்க்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2020
04:10


சொர்க்கத்தைப் பற்றி பலரும் பலவிதமாக கற்பனை செய்து வைத்திருப்பர். நபிகள் நாயகம் சொர்க்கம் பற்றி கூறும் இனிய செய்திகளைக் கேட்போமா!  இறைவனிடம் ஒருவன் மூன்றுமுறை சொர்க்கத்தை கேட்பானேயானால், சொர்க்கம் இறைவனிடம், “யா அல்லாஹ்! இவனை சொர்க்கத்தில் நுழைய  வைப்பாயாக,” என்று சொல்லும். ‘நரகத்தை விட்டும் என்னைக் காப்பாயாக’ என்று இறைவனிடம் கேட்டால், நரகம் இறைவனிடம், “யா அல்லாஹ்! இவனை நரகத்தை விட்டும் காப்பாற்றுவாயாக,” என்று சொல்லும். சொர்க்கமும் நரகமும் உங்கள் பெற்றோராகும். அவர்களுக்கு நல்லதைச் செய்தால் சொர்க்கத்தின் வாசலை அல்லாஹ் திறந்து விடுகிறான். நோவினைச் செய்தால் நரகம் தான் கிடைக்கும். கோபத்தை வெளிப்படுத்தும் தன்மை இருந்தும், அதனை வெளிப்படுத்தாமல் அடக்கியாண்ட தன்மையுடைய அடியவனை கியாமநாளில் மக்கள் மத்தியில் இறைவன் அழைப்பான். அவன் விரும்பிய சொர்க்கத்தின் ஹூருல்ஈன் (கன்னி) பெண்களைத் தேர்ந்தெடுப்பதற்கு அவனுக்கு முழு உரிமை வழங்கப்படும்.

“மனிதர்களே! நீங்கள் இறைவனிடம் சொர்க்கப்பதியை வேண்டும் போதெல்லாம் ‘பிர்தவ்ஸ்’ என்னும் சொர்க்கத்தைக் கேளுங்கள். ஏனென்றால் சொர்க்கங்களுக்கு எல்லாம் உயர்வானது ‘ஜன்னத்துல் பிர்தவ்ஸ்’ என்னும் சொர்க்கமாகும். உங்கள் குழந்தைகளை அதிகமாக முத்தமிடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும் சொர்க்கத்தில் பதவியுண்டு. எவர் நரகத்தை விட்டும் பாதுகாக்கப்பட்டு, சொர்க்கத்தில் நுழைய வேண்டும் என்று ஆசைப்படுகிறாரோ, அவர் அல்லாஹ்வைக் கொண்டும், மறுமைநாளைக் கொண்டும் விசுவாசம் கொண்ட நிலையில் மரணிக்கட்டும். தனக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்பட்டும். சொர்க்கத்திற்கு சென்ற பின் சிறியவராயினும், பெரியவராயினும், எவராயினும் முப்பது வயதுடைய வாலிபர்களாகவே இருப்பார்கள். நிச்சயமாக சொர்க்கவாசிகள் உணவு உண்பர். பானம், நீர் பருகுவார்கள். அவர்களுக்கு சளியும் ஏற்படாது. அவர்கள் உண்ணும் உணவு நறுமணம் கமழும் ஏப்பமாகவும், வியர்வையாகவும் மாறிவிடும். சொர்க்கவாசிகளின் மேனியில் முடி இருக்காது. அவர்களின் கண்கள் அழகாக தோற்றமளிக்கும். அவர்களின் வாலிபமும் அழியாது. ஆடைகளும் பழமையாகாது. சொர்க்கவாசிகள் ஒவ்வொருவருக்கும் கண்ணழகிகளான கன்னிப்பெண்கள் கிடைக்கப்பெறுவர். சொர்க்கத்துக்கு போக ஆசை இருந்தால் நல்லதைச் செய்து இறைவனின் அருளைப் பெற வேண்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar