Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சபரிமலை கோவிலில் ஒரு நாளைக்கு 1000 ... லண்டனில் ஹிந்துக்களுக்கு எதிரான புத்தகம் வாபஸ் லண்டனில் ஹிந்துக்களுக்கு எதிரான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோளிங்கர் மலையில் ரோப்கார் பணி: பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
சோளிங்கர் மலையில் ரோப்கார் பணி: பக்தர்கள் கோரிக்கை

பதிவு செய்த நாள்

08 அக்
2020
09:10

ராணிப்பேட்டை: சோளிங்கர் மலையில், ரோப்கார் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், 108 வைணவ திவ்ய தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள, ஒரே மலைக்குன்றின் மீது,  யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர் ஆகியோர், தனித்தனி கோவில்களில் எழுந்தருளி உள்ளனர். யோக நரசிம்மரை தரிசிக்க  1,305 படிகளும், யோக ஆஞ்சநேயரை தரிசிக்க, 450 படிகளும் ஏறிச் செல்ல வேண்டும். இங்கு, திருமண தடை, குழந்தை வரம், பில்லி சூனியம், பேய், பிசாசு போன்றவற்றில் இருந்து விடுபடவும், வேண்டுதல்கள் நிறைவேறும் என்பதும் ஐதீகம். அண்டை மாநிலங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் இங்கு வருகின்றனர்.

சோளிங்கர் மலைக்கு செல்ல, 2014ல் ரோப்கார் அமைக்க, 8.27 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி, பணிகள் தொடங்கின. ஆண்டுதோறும் கார்த்திகையில், ஐந்து வாரங்கள் இங்கு பிரம்மோற்சவம் நடக்கிறது. அதற்குள், ரோப்கார் அமைக்கும் பணிகள் முடிக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, சோளிங்கர் லட்சுமி  நரசிம்மர் கோவில் அதிகாரிகள் கூறியதாவது:  தற்போது, யோக நரசிம்மர் கோவிலுக்கு செல்ல, 448 மீட்டர் உயரத்தில், செங்குத்தாக ரோப்கார் அமைக்கும் பணிகள், முழு வீச்சில் நடக்கிறது. இதற்கான கட்டடம், 125 குதிரை திறன் கொண்ட மோட்டார் பொறுத்துவது,  கம்பி வடம் அமைப்பது என, 85 சதவீதம் பணிகள் முடிந்து விட்டன. சோதனை ஓட்டத்துக்கு பிறகு, விரைவில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.  ஒரு ரோப் காரில், நான்கு பேர் வீதம், நான்கு ரோப்பில், 16 பேர் என, ஒரு நாளைக்கு 3,000 பேர், பெரிய மலைக்கு சென்று வரலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar