Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாங்கோட்டு பகவதி அம்மன் கோவிலில் 250 ... தேவநாத பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் தேவநாத பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நங்கையர் பங்கேற்கும் நவராத்திரி கொலு
எழுத்தின் அளவு:
நங்கையர் பங்கேற்கும் நவராத்திரி கொலு

பதிவு செய்த நாள்

09 அக்
2020
10:10

பழநி : அக்.17 ல் துவங்கும் நவராத்திரியையொட்டி பழநியில் ஏராளமான தெய்வங்களின் பொம்மைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.

நம்தேசத்தில் நவராத்திரி விழாவில் பெண் தெய்வங்களை போற்றி வணங்குவது வழக்கம். நங்கையரின் நவராத்திரி சிறப்பை பறைசாற்றுவது வீடுகளில் வைக்கப்படும் கொலுதான். ஒன்பது நாட்களும் பொம்மைகளை வைக்கும் கொலு படிகளை வீட்டில் பிரத்யேக மரப்பலகையில் அமைப்பர். முதல் படியில் புல், பூண்டு போன்ற ஓரறிவு உயிரினங்கள் துவங்கி, இரண்டாம் படியில் ஈரறிவு உயிரினங்கள், மூன்றாம் படியில் மூன்றறிவு, நான்காம் படியில் நான்கறிவு, ஐந்தாம் படியில் ஐந்தறிவு, ஆறாம் படியில் மனிதன், மனிதர்களின் பழக்க வழக்கங்கள், ஏழாம் படியில் உயர்ந்த மகான்கள், எட்டாம் படியில் பகவானின் அவதாரங்கள், ஒன்பதாம் படியில் தெய்வங்களின் பொம்மைகளை வைத்திருப்பர்.

பழநியைச் சேர்ந்த ரேவதி கூறியதாவது: அமாவாசை அன்று இரவு கலசம் வைத்து துவக்குவோம். ஒற்றைப் படையில் கொலு படிகள் வைப்போம். கடைசி நாள் விஜயதசமி அன்று பூஜை செய்து விக்ரகங்களை பத்திரப்படுத்துவோம். தினமும் நெய்வேத்தியம் செய்து கன்னிப் பெண்களை பாடச் சொல்லி, பரிசு கொடுப்போம். தற்போதுள்ள சூழலில் பலரை ஒரே நேரத்தில் வரவழைக்காமல் தனித்தனியாக அழைத்து வழிபட அனுமதிப்போம் என்றார்.சன்னதி வீதி வியாபாரி எம்.நாகராஜன் கூறியதாவது: விநாயகர், முருகன், கண்ணன், காஞ்சிப் பெரியவர் உட்பட தனிப்பொம்மைகள், சீதா கல்யாணம், ராவண தர்பார், ராமர் பட்டாபிஷேகம், கார்த்திகை பெண்கள், சப்த கன்னியர் என குழுபொம்மைகள் உள்ளன. காஞ்சிபுரத்தில் பொம்மைகளை் வாங்கி விற்கிறோம். தற்போது ஊரடங்கு தளர்வுக்குப்பின்பும் சிலரே வாங்கிச் செல்கின்றனர்” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar