Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூ புத்தரி அறுவடை திருவிழா: ... முத்தாலம்மன் கோயில் திருவிழா: 7 ஊர் சப்பரத்திருவிழா முத்தாலம்மன் கோயில் திருவிழா: 7 ஊர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் அபிஷேகம் திருமண பதிவு துவங்க வேண்டும்
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் அபிஷேகம் திருமண பதிவு துவங்க வேண்டும்

பதிவு செய்த நாள்

05 நவ
2020
12:11

 திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் பங்கேற்கும் அபிஷேகம் மற்றும் திருமண பதிவு துவக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். திருத்தணி முருகன் கோவிலில், தினமும், மூன்று கால அபிஷேகம் நடக்கிறது. இந்த அபிஷேகத்தில், இரண்டு பக்தர்கள் பங்கேற்க, சிறப்பு கட்டணமாக, 1,500 ரூபாய் காணிக்கையாக பெறப்படுகிறது.

ஒரு அபிஷேகத்திற்கு, அதிக பட்சமாக, 50 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.அதே போல், மலைக்கோவிலில் திருமணம் செய்வதற்கு, ஒரு ஜோடிக்கு, 2,500 ரூபாய் சிறப்பு கட்டணமாக நிர்ணயம் செய்து வசூலிக்கப்படுகிறது.இதுதவிர, பக்தர்கள் தங்கத்தேர், வெள்ளித்தேர் மற்றும் வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் முருகப் பெருமானை தேர் வீதியில் உலா வருவதற்கு, 1,500 - 4,000 ரூபாய் வரை பக்தர்களிடம் காணிக்கையாக கோவில் நிர்வாகம் வசூலிக்கப்படுகிறது.இதனால், கோவிலுக்கு கணிசமான வருவாய் கிடைத்து வந்தது. இந்நிலையில், கடந்த மார்ச், 22ம் தேதி முதல், கொரோனா தொற்று காரணமாக மேற்கண்ட அபிஷேகம் மற்றும் திருமண பதிவு ரத்து செய்யப்பட்டது. மேலும், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.இந்நிலையில், இரு மாதங்களுக்கு முன், அரசு உத்தரவு, தளர்வுகள் மற்றும் உரிய விதிமுறைகளின் படி முருகன் கோவில் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.ஆனால், அபிஷேகம் மற்றும் திருமண பதிவு இன்னும் துவங்கப்படவில்லை. இதனால், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகின்றனர்.எனவே, கோவில் வருமானம் மற்றும் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்ற, அபிஷேகம் மற்றும் திருமண பதிவு மீண்டும் துவங்க, அரசு அனுமதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar