Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருந்தினரை அழைத்தால் அபராதம் : ... அமா சர்வமங்களாவின் இலவச ஸ்லோக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான அங்காள பரமேஸ்வரி கோவிலில் சிலை திருட்டு
எழுத்தின் அளவு:
பழமையான அங்காள பரமேஸ்வரி கோவிலில் சிலை திருட்டு

பதிவு செய்த நாள்

10 நவ
2020
04:11

வெள்ளகோவில்: வெள்ளகோவில் கோவை ரோட்டில் 3 வது கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. கோவிலில் உள்ள மூலவர் அருகே 90 ஆண்டுகள் பழமையான வாய்ந்த அங்காள பரமேஸ்வரி உற்சவர் சிலை நேற்றிரவு திருடப்பட்டது.

அங்காள பரமேஸ்வரி சிலை வெண்கலமா? ஐம்பொன்னாலானதா? என அங்கு இருப்பவர்களுக்கே தெரியவில்லை. இச்சிலை 1931 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, 90 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலை எனவும் கூறுகின்றனர். கோவிலின் மேல்புறம் அருகில் குடும்பத்துடன் வசிக்கும் சின்னச்சாமி கதிர்வேல். 51. கோவில் பூசாரியாக உள்ளார். நேற்று இரவு பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். காலை 6.30 மணி அளவில் வந்து பார்த்த போது அங்காள பரமேஸ்வரி சிலை திருட்டு போனது தெரிய வந்துள்ளது.

கோவிலின் பின்புற காம்பவுண்ட் சுவர் ஏறி, பின்பக்க கேட் 2 பூட்டை உடைத்து, கர்ப்பகிரகத்தில் உள்ள கிரில் பூட்டை உடைத்து, மேலும் மரக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே பீடத்திலிருந்த சுவாமி சிலையை திருடி உள்ளனர். கோவிலின் முன் உள்ள உண்டியல் உடைக்கப்படவில்லை, கோவிலில் கேமரா இல்லாதது திருடர்களுக்கு சாதகமானது. திருடர்கள் உடைக்கப்பட்ட பூட்டு மட்டும் கம்பிகளை போலீசார் கைப்பற்றினர். சம்பவ இடத்திற்கு மாவட்ட கைரேகை பதிவு டி.எஸ்.பி., சுப்பிரமணி தலைமையிலான எஸ்.ஐக்கள் மணிகண்டன் செல்வராஜ், ஆகியோர் கைரேகையை பதிவு செய்து சென்றனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ., கந்தசாமி தலைமை காவலர் சந்திரகுமார், மாவட்ட குற்றப்பிரிவு எஸ்.ஐ. மற்றும் காங்கேயம் டி.எஸ்.பி., தனராசு வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், எஸ்.ஐ., விஜயபாஸ்கர் ஆகியோர் விசாரித்தனர். வெள்ளகோவில் பகுதியில் கோவிலில் பூட்டை உடைத்து சிலை திருட்டு போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, 16 கால் மண்டபம் அருகில் கார், வேன், பேருந்து உள்ளிட்ட ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது.கோபால்பட்டி அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar