பதிவு செய்த நாள்
29
நவ
2020
09:11
பெ.நா.பாளையம்: கார்த்திகை தீபத்தை ஒட்டி பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், தடாகம் வட்டாரங்களில் உள்ள கோவில், வீடுகளில் தீபம் ஏற்றி பொதுமக்கள், பக்தர்கள் வழிபட்டனர்.
துடியலூர் அருகே வட மதுரையில் உள்ள விருந்தீஸ்வரர் கோவில், இடிகரை வில்லீஸ்வரர் கோவில், நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், அங்காளம்மன் கோவில், கொங்காளம்மன் கோவில், சித்தி விநாயகர் கோவில், ராக்கி பாளையம் தன்னாசியப்பர் கோவில், பாலமலை அரங்கநாதர் கோவில், பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில், வீரபாண்டி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் கார்த்திகை தீப வழிபாடு நடந்தது இதில், பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல, தடாகம், துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரங்களில் வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி இறைவனை வழிபட்டனர்.