பூரட்டாதி 4ம் பாதம் : றிவன ஸ்தானத்தின் வலிமையோடு இந்த மாதத்தினை துவக்குகிறீர்கள், உங்கள் முயற்சிகள் அனைத்தும் பயனுள்ள வகையில் அமையும். திட்டமிட்டிருந்த பணிகளை தகுதியானவர்களின் துணையோடு வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். ராசிநாதனும் நட்சத்திர அதிபதியும் ஆன குரு நீச பலம் பெற்றாலும் வெற்றியைத் தரும் வகையில் அமர்ந்திருப்பதால் ஏதேனும் ஒரு வகையில் வெற்றி என்பது சாத்தியமாகி வரும்.சொன்ன சொல்லைக் காப்பதை கௌரவமாக எண்ணுவீர்கள். குடும்பத்தில் இருந்து வரும் சலசலப்பைப் போக்க முயற்சிப்பீர்கள். ஆளுக்கொரு திசையில் பயணிக்கும் குடும்ப உறுப்பினர்களை உங்கள் வார்த்தைகளின் மூலம் கட்டுக்குள் கொண்டு வருவீர்கள். பண வரவு சிறப்பாக இருக்கும். கடன் பிரச்னைகள் குறையும். சூடான பொருட்களைக் கையாளும்போது அதிக கவனம் தேவை. உடல்நிலையைக் காக்க எண்ணெய் பலகாரங்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம். உடன்பிறந்தாரோடு வீண் மனஸ்தாபம் தோன்றி மறையும். மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களால் உதவி கிட்டும். வளர்ப்புப் பிராணிகளிடம் பழகும்போது அதிக எச்சரிக்கை தேவை. உறவினர்களின் வருகையால் வீட்டினில் கலகலப்பான சூழல் தொடர்ந்து கொண்டிருக்கும். செலவுகள் அதிகரித்தாலும் அதனை முழு மனதுடன் செய்து வருவீர்கள். பிள்ளைகள் தங்கள் தேவைகளுக்கு உங்களைப் பெரிதும் சார்ந்திருப்பர். வாழ்க்கைத்துணையின் எண்ண ஓட்டத்தினைப் புரிந்துகொண்டு அவரது பணிகளுக்கு பக்கபலமாக துணை நிற்பீர்கள். பணிபுரிவோர் அலுலகத்தில் தங்கள் அதிகாரமான பேச்சின் மூலம் வேலைகளை சாதித்துக் கொள்வர். மாணவ, மாணவியர் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி நற்பெயர் காண்பார்கள். சாதகமான பலன்களைத் தரும் மாதம் இது.
பரிகாரம் : அபிராமி அந்தாதி படித்து வாருங்கள். சந்திராஷ்டமம் : ஜன. 7
உத்திரட்டாதி : ஜென்ம ராசியின் அதிபதி குரு நீச பலம் பெற்றாலும் நட்சத்திர அதிபதி சனி டிச. 27 முதல் ஆட்சி பலம் பெற உள்ளதால் சிறப்பான வெற்றியைப் பெறும் காலத்திற்குள் நுழைகிறீர்கள். அதே நேரத்தில் அற்பமான விஷயங்களுக்குக் கூட அதிக முக்கியத்துவம் கொடுத்து அநாவசியமான பயத்தினை உண்டாக்கிக் கொள்கிறீர்கள். புதிதான ஒரு செயலைத் துவக்கும்போது கூடுதல் படபடப்பினை உணர்வீர்கள். உங்களது சிறப்பம்சமான நிதானத்தைக் கடைபிடித்தால் வெற்றி பெறலாம். ஆயினும் கூடுதலாக யோசிப்பது குழப்பத்தையே தரும் என்பதால் இக்கட்டான நேரத்தில் நீங்கள் ஆசானாகக் கருதும் நபரோடு கலந்தாலோசித்து முடிவுகளை எடுத்தால் வெற்றி நிச்சயம். உங்களது அறிவுக்கூர்மை வெளிப்படும் வகையிலான சம்பவங்கள் நிகழும். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு நேரம் சாதகமாக இருக்கும். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் ஏற்றம் காண்பதோடு பெரிய அளவிலான போட்டிகளிலும் வெற்றி காண்பார்கள். உறவினர்களின் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும். குடும்பத்தோடு ஆன்மீகப் பயணம் சென்று வர திட்டமிடுவீர்கள். பல்வலி, அஜீரணக் கோளாறு ஆகியவற்றால் உடல்நிலையில் லேசான சிரமத்தைக் காண்பீர்கள். வாழ்க்கைத்துணையோடு கொண்டிருந்த கருத்து வேறுபாடு காணாமல் போகும். நண்பர்களை நம்பி ஒப்படைத்த காரியங்கள் அப்படியே செயல்படாமல் நிற்பதை எண்ணி மனம் வருந்த நேரிடும். தொழிலதிபர்கள் டிச. மாத இறுதியில் சற்று அளவுக்கதிகமான செலவுகளுக்கு ஆட்பட நேரிடும். நினைத்த செயல்களை செய்து முடிப்பதற்குள் கடுமையான அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். தொழில் ரீதியாக சிறுசிறு அலைச்சலை சந்திப்பதை தவிர்க்க இயலாது. கலைத்துறையினர் அடுத்தவர்களின் உதவியினை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியிருக்கும். வீட்டினில் ஆடம்பர பொருட்கள் சேரும். நன்மையைத் தரும் மாதம் இது.
பரிகாரம் : சக்கரத்தாழ்வாரை வணங்கி வாருங்கள். சந்திராஷ்டமம் : ஜன. 7, 8
ரேவதி : ராசிநாதன் குருவின் சஞ்சாரம் மனதினில் பொதுநலன் பற்றிய சிந்தனைகளை அதிகரிக்கச் செய்யும். நான்குபேர் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் முன்நிற்க வேண்டி வரும். முன்பின் தெரியாத சிறிதும் சம்பந்தமில்லாத நபர்களுக்குக் கூட உதவ முற்படுவீர்கள். தனாதிபதியின் நிலை தொடர்ந்து திருப்திகரமாக இருந்து வருவதால் உங்கள் செயல்களுக்கு பொருளாதார ரீதியான சிக்கல் ஏதும் இராது. மகிழ்ச்சி பொங்கும் வார்த்தைகளை வெளிப்படுத்துவீர்கள். குடும்ப நண்பர்களின் உதவியால் பொருள் சேமிப்பில் ஈடுபடும் வாய்ப்புகள் உண்டு. அதே நேரத்தில் புதிய நண்பர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் இருத்தல் நலம். அவசரப்பட்டு நீங்கள் இறங்கும் செயல்களில் சற்று சுணக்கமான நிலையை உணர்வீர்கள். மாதத்தின் துவக்கத்தில் வாகனத்தால் செலவுகள் நேரும் வாய்ப்புகள் உள்ளது. மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் மேம்பட தீவிர பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டி வரும். பிள்ளைகளின் விருப்பத்தினை நிறைவேற்றுவதற்காக செய்யும் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. நரம்புத் தளர்ச்சி சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் தீவிர கவனம் செலுத்துவது அவசியம். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கடன்பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். அரசுத் தரப்பில் இழுபறியில் இருந்து வந்த பணிகளில் சாதகமான முடிவினைக் காண்பீர்கள். வாழ்க்கைத்துணைவரின் செயல்களில் உண்டாகும் குழப்பத்தினை உணர்ந்து அவருக்குத் தேவையான ஆலோசனையைச் சொல்லி வெற்றிக்கு துணையிருப்பீர்கள். செலவுகளைச் சமாளிக்க பழைய சேமிப்புகள் உதவும். வெளிநாட்டுப் பயணம் செல்லக் காத்திருக்கும் கலைத்துறையினர்க்கு காலம் கனிந்து வரும். தொழில் ரீதியாக இருந்து வந்த மந்தமான நிலை காணாமல் போகும். உத்யோகஸ்தர்கள் தங்கள் தனித்திறமையால் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பார்கள். நற்பலன்களைத் தரும் மாதம் இது.
பரிகாரம் : சண்டிகேஸ்வரர் சந்நதியில் விளக்கேற்றி வழிபடுங்கள். தினமும் காலையில் தேவாரப் பாடல்களை படித்து வாருங்கள்.