பதிவு செய்த நாள்
16
டிச
2020
07:12
அவிட்டம் 3, 4ம் பாதம் : இந்த மாதத்தில் சற்று ஏற்ற இறக்கமான பலன்களைக் காண உள்ளீர்கள். டிச. 27 வரை ராசிநாதன் சனியின் லாப ஸ்தான சஞ்சாரம் பலத்தினைத் தருவதால் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். இந்த மாதத்தில் நிகழ உள்ள சனிப்பெயர்ச்சியின் மூலம் ஏழரைசனியின் காலத்திற்குள் நுழைய உள்ளதால் வீண் மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். உங்கள் மனக்கவலையை மறைத்து குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துவீர்கள். நட்சத்திர அதிபதி செவ்வாய் மூன்றில் ஆட்சி பலம் பெறுவதால் சுயமுயற்சி என்பது சிறப்பான வெற்றியைப் பெற்றுத் தரும். அடுத்தவர்களை நம்பியிருக்காமல் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வாருங்கள். பண வரவு சிறப்பாக இருக்கும். செலவினங்களும் அதிகரிக்கத் துவங்கும். மளிகை, காய்கறி உட்பட எந்தப் பொருள் வாங்கினாலும் அதன் தரத்தை அறிய வேண்டியது அவசியம். அண்டை வீட்டாருக்கு உதவி செய்ய நேரிடும். மின்சார உபகரணங்களைக் கையாளும்போது அதிக கவனம் தேவை. டிச. இறுதி வாரத்தில் எதிர்பாராத வெளியூர் பிரயாணத்தை சந்திக்க நேரிடும். பிள்ளைகளால் செலவுகள் உண்டாகும். உத்யோகம் பார்ப்போர் அலுவல் பணி காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரலாம். மாணவர்கள் சனிக்கிழமை நாட்களில் சிந்தனை சிதறலால் அவதியுற நேரிடும். கவனத்தை சிதறவிடாது படிக்க வேண்டியது அவசியம். இரவினில் கனவுத்தொல்லையால் நிம்மதியான உறக்கம் கெடும். சரிசம பலன்களைக் காணும் மாதம் இது.
பரிகாரம் : பழனி முருகனை வணங்கி வாருங்கள்.
சந்திராஷ்டமம் : ஜன. 5
சதயம் : நடந்து முடிந்த குருப்பெயர்ச்சியும் நடக்க உள்ள சனிப்பெயர்ச்சியும் சாதகமற்ற சூழலை உண்டாக்குவதால் கடுமையான அலைச்சலைக் காண்பீர்கள். ஒன்றுமில்லாத விஷயங்களுக்குக் கூட அதிகம் கோபப்படுவீர்கள். வீண் கௌரவம் கருதி நீங்கள் செய்யும் செயல்களில் அதிகம் பொருள் விரயமாவதைப் பற்றி கவலை கொள்ளாது செயல்படுவீர்கள். அதிகமாக செலவு செய்து நினைத்த காரியங்களை உடனடியாக செய்து முடிக்க முயற்சித்து வருகிறீர்கள். செயலில் இருந்து வரும் வேகத்தினைக் குறைத்துக்கொண்டு நிதானத்துடன் செயல்பட்டு வந்தீர்களேயானால் பொருள் மிச்சமாவதோடு வெற்றியும் நிச்சயமாய் கிடைக்கும். ஒரு சில நேரத்தில் இயலாமையினால் உண்டாகும் கோபத்தினை வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகளில் வெளிப்படுத்துவீர்கள். இதனால் குடும்பத்தில் லேசான சலசலப்பு தோன்றும் வாய்ப்பு உண்டு. அதே போன்று பொது இடங்களில் நீங்கள் பேசும் வார்த்தைகளால் அநாவசியமான வம்பு தும்புகள் உருவாவதோடு பிரச்னையும் பெரிதாகக் கூடும். கூடுதல் எச்சரிக்கை தேவை. வெளியூர் பிரயாணங்கள் வெற்றியைத் தரும். எண்ணங்களில் நற்சிந்தனைகள் நிறைந்திருந்தாலும் அதனை வெளிப்படுத்தும் விதத்தில் ஆக்ரோஷம் நிறைந்திருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் உதவிகள் வந்து சேரும். கடுமையான வேலை பளுவின் காரணமாக வாழ்க்கைத்துணையுடன் நேரத்தினை செலவழிக்க இயலாது போகும். நண்பர்களை நம்பி ஒப்படைத்த காரியங்களில் இழுபறி நீடிக்கும். பொதுப்பணிகளில் ஈடுபடவேண்டி வரும். நீங்கள் கடுமையான உழைப்பாளி என்பதால் அலுவலகத்தில் உங்களைப் பயன்படுத்திக்கொண்டு மற்றவர்கள் நற்பெயரை அடைவார்கள். சுயதொழில் செய்வோருக்கு புதிய தொழிலுக்கான முதலீட்டில் பற்றாக்குறை உண்டாகும். கலைத்துறையினர் வெளியூர் பிரயாணம் செல்ல வேண்டியிருக்கும். மாணவர்கள் அறிவியல் பாடத்தில் ஏற்றம் காண்பார்கள். நிதானமாகச் செயல்பட்டால் நன்மையைத் தரும் மாதமே.
பரிகாரம் : ரேணுகா தேவியை வழிபட்டு வரவும்.
சந்திராஷ்டமம் : ஜன. 5, 6
பூரட்டாதி 1, 2, 3ம் பாதம் : அலைச்சலைத் தரும் 12ம் வீட்டில் நட்சத்திர அதிபதி குரு நீசம் பெறும் நிலையில் அவருடன் ராசிநாதன் சனியும் இணைய உள்ளதால் அதிக அலைச்சலைக் காண உள்ளீர்கள். என்றாலும் நீச பங்க ராஜ யோகம் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ராசிநாதன் ஆட்சி பலம் பெற உள்ளதால் அலைச்சலிலும் வெற்றி என்பதைக் காண்பீர்கள். இந்த மாதத்தில் செய்து முடிக்கலாம் என நீங்கள் திட்டமிட்டிருந்த காரியங்கள் இழுபறியில் முடியக்கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொடுப்பதில் இரட்டிப்பு செலவுகள் உண்டாகக் கூடும். அதே நேரத்தில் எதிர்பாராத விதமான பணவரவும் இருக்கும். செலவுகள் அதிகம் ஆவதால் குடும்ப உறுப்பினர்களுக்குள் லேசான சலசலப்பு இருந்து வரும். உடன்பிறந்தோரை நம்பி இருந்த விஷயங்கள் முடிவிற்கு வராமல் அலைச்சலைத் தரும். தகவல்தொடர்பு சாதனங்கள் முக்கியமான நேரத்தில் பழுதாகி உங்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது. ஒவ்வொரு விஷயத்தை செய்து முடிக்கும் வரை மனதிற்குள் லேசான பயம் இருந்து வரும். சிந்தனையில் இருக்கும் தடுமாற்றம் வாய் வார்த்தைகளிலும் வெளிப்படும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் பிரச்னைகள் உருவாகலாம். ஜன. முதல் வாரத்தில் உங்கள் உடல்நிலையோடு மனநிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது.
வாழ்க்கைத்துணையோடு லேசான கருத்து வேறுபாடு கொள்வீர்கள். செலவுகளைக் கட்டுப்படுத்த இயலாவிட்டாலும் கூட நீண்ட நாள் கடன் பாக்கிகளை கறாராக வசூல் செய்து விடுவீர்கள். கையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். ஆகவே அநாவசிய செலவுகளைத் தவிர்க்க மனைவி மற்றும் பிள்ளைகளின் பெயரில் அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வது நல்லது. சான்றோர்கள், மற்றும் பெரியவர்களின் தொடர்பால் மனமகிழ்ச்சி கொள்வீர்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்பினைப் பெறுவார்கள். செய்யும் தொழிலில் கூடுதல் பொறுப்புகளை சுமக்க வேண்டி இருக்கும். சரிசம பலனைத் தரும் மாதமிது.
பரிகாரம் : உலகளந்த பெருமாளை வணங்கி வாருங்கள்.
சந்திராஷ்டமம் : ஜன. 6