பல்லடம்: மார்கழி உற்சவம் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என, பல்லடம் சத்யசாயி சமிதி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: பல்லடம் சத்யசாயி சேவா சமிதி சார்பில், ஆண்டுதோறும் மார்கழி உற்சவ விழா நடத்தப்பட்டு வருகிறது. ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி உள்ளிட்டவற்றுடன், சிறுவர் சிறுமிகளுக்கான திருப்பாவை திருவெம்பாவை இலவசமாக கற்றுத்தரப்படுகின்றன. எண்ணற்ற பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பயனடைந்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக வைக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றனர். இதுபோல், அரசு விதித்துள்ள நோய்தடுப்பு கட்டுப்பாடுகளை பின்பற்றி, 50 - 60 பேர் பங்கேற்கும் வகையில் விழாவை நடத்த தீர்மானித்துள்ளோம். எனவே, மார்கழி உற்சவ விழா நடத்த மாவட்ட நிர்வாகம்அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.