பதிவு செய்த நாள்
18
டிச
2020
04:12
மதுராந்தகம் - உத்திரமேரூர் சிவன் கோவிலில் கண்டெடுத்த தங்க குவியலை விஞ்ஞானப் பூர்வமாக ஆய்வு செய்து, அறிக்கை வெளியிட உள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்த, பெரும்பாக்கம் ஊராட்சியில், அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது.செங்கல்பட்டு கலெக்டர் ஜான் லுாயிஸ் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்று, மினி கிளினிக்கை திறந்து வைத்தார்.அப்போது அவர் கூறியதாவது: ஒவ்வொரு மினி கிளினிக்கிலும், 1 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் மருந்துகள் இருப்பு வைக்கப்படும்.காலை, 8:00 மணிக்கு துவங்கி, பகல், 12:00 மணி வரையிலும், மாலை, 4:00 மணியிலிருந்து, இரவு, 7:00 மணி வரை, கிளினிக் செயல்படும்.இந்த திட்டத்திற்காக, 2,000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர், உத்திரமேரூர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணங்கள், 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் என, நம்புகிறோம்.இந்த தங்க நகைகளை, பண்பாட்டு முறையில், விஞ்ஞானப் பூர்வமாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.