பதிவு செய்த நாள்
03
ஜன
2021
10:01
கோத்தகிரி: கோத்தகிரி ஒன்னதலை மடிமனையில் ஹெத்தையம்மன் திருவிழா எளிமையாக கொண்டாடப்பட்டது.
படுக சமுதாய மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா, கடந்த திங்கட்கிழமை துவங்கியது. கிராம கோவிலில் இருந்து, செங்கோல் பக்தர்கள், அம்மனை மடிமனைக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். அங்கு விரதம் இருக்கும் பக்தர்கள், எட்டு நாட்கள் இரவில் அம்மன் அருள்வாக்கு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். விழாவின் ஒரு நிகழ்ச்சியாக, நேற்று ஒன்னதலை மடிமனையில் மிக எளிமையாக விழா நடந்தது. பகல், 1:00 மணியளவில் அம்மன் அருள்வாக்கு, காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, செங்கோல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக, பக்தர்களின் கூட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்ட நிலையில், விழா மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டது. முக்கிய திருவிழா நாளான இன்று, மடி மடிமனையில் இருந்து, கிராம கோயிலுக்கு அம்மனை அழைத்து சென்று, அங்கு மிக எளிமையாக விழா கொண்டாடப்படுகிறது.