பதிவு செய்த நாள்
03
ஜன
2021
10:01
குன்னுார்:குன்னுார் அருகே, உள்ள கொல்லிமலை கிராமத்தில், கோத்தர் இன பழங்குடி மக்களின் அய்யனோர்; அம்மனோர் விழா கொண்டாடப்பட்டது.
நீலகிரியில், குரும்பர், இருளர், தோடர், கோத்தர் உட்பட பழங்குடியின மக்கள், தற்போதும் பாரம்பரியம் மாறாமல் தங்களது விழாக்களை கொண்டாடுகின்றனர்.இயற்கை மற்றும் மூதாதையர்களை மட்டும் தங்களின் கடவுளாக, கோத்தர் பழங்குடியினர் வழிபடுகின்றனர். இந்நிலையில், கோத்தரின மக்களின், அய்யனோர்; அம்மனோர் எனும் திருவிழா, கொல்லிமலை கிராமத்தில் நடந்தது. எட்டு நாட்கள் விரதம் இருந்த மக்கள், பொங்கல் வைத்து, ஆடல் பாடல்களுடன் எளிமையாக கொண்டாடினர்.விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும், தானியங்கள் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. நிறைவாக, தங்களின் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.