கூடலுார் : சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் கூடலுார் தம்மணம்பட்டியில் உள்ள அடிவார ஐயப்பன் கோயிலில் இருமுடி செலுத்தி தரிசனம் செய்து செல்கின்றனர்.
கூடலுார் தம்மணம்பட்டியில் 1989 ல் உமா ஆனந்த்நாத் சுவாமிகள் மூலம் நடந்து செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க குடிசை அமைக்கப்பட்டது. பின் அங்கு சபரிமலை அடிவார ஐயப்பன் கோயில் கட்டப்பட்டது. 2003ல் சபரிமலை ஸ்ரீ கண்டாறு ராஜீவ் தந்திரி அவர்களால் பிரதிஷ்டை செய்து கும்பாபிேஷகம் நடந்தது.சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலைப் போன்றே 18 படிகள், பின்வாசல் அமைக்கப்பட்டுள்ளது
தற்போது சபரிமலையில் தினந்தோறும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதியுள்ள நிலையில் அனைவரும் சென்று தரிசனம் செய்ய முடியவில்லை. பல்வேறு பகுதியில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் கூடலுார் தம்மணம்பட்டி அடிவார ஐயப்பன் கோயிலில் 18 ம் படியேறி இருமுடி செலுத்தி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர். சபரிமலையில் நடத்தப்படும் அனைத்து பூஜைகளும் இங்கு நடப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.