வெள்ளகோவில்: வெள்ளகோவில் குமாரவலசு சாலையிலுள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நிறைவுற்று 5 ம் ஆண்டு திருக்கொடியேற்றம் கடந்த 30 ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 7 நாட்களுக்கு காலை அபிஷேக ஆராதனை மற்றும் மாலை உற்சவர் திருமேனி அபிஷேகம், யாகசாலை பூஜை, அஷ்டபலி பூஜை தீபாராதனை நடந்தது, இரவு 7 மணி அளவில் உற்சவர் திருமேனி திருவீதி உலா நடந்தது.
தொடர்ந்து ஜன 4 ம் தேதி இன்று காலை 4 மணி அளவில் மகா கணபதி ஹோமம் நடைபெற உள்ளது.காலை 10 மணி அளவில் ஸ்ரீ துர்க்கா மகாலட்சுமி சுதர்சன ஹோமம் நடக்கிறது. மாலை 5 மணி அளவில் திருவிளக்கு பூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை ஆரம்பம். இரவு 7 மணி அளவில் திருவிளக்கு பூஜை மகாதீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பசுவாமி உற்சவமூர்த்திக்கு கொடுமுடி காவிரி நதியில் ஆராட்டு ( நீராட்டு ) சுவாமிக்கு அஷ்ட திரவிய அபிஷேகம் மகா தீபாராதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஐயப்ப பூஜா சங்கம் மற்றும் சேவா சங்க அறக்கட்டளையினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.