Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவனை வழிபடும் காளை பணம் சேர வரகூர் வாங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தர்மத்தாய் ஜூவாலாமுகி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2021
11:01

மைசூரு என்றாலே நம் நினைவுக்கு வருவது சாமுண்டீஸ்வரியம்மன் கோயில் தான். அவளின் தங்கை ஜுவாலாமுகிக்கும் கோயிலும் இருக்கு. உங்களுக்கு தெரியுமா... கர்நாடகா மாநிலம் மைசூருக்கு அருகிலுள்ள உத்தனஹள்ளியில் கோயில் உள்ளது.
 ரத்த பீஜாசுரன் என்னும் அசுரனுடைய உடம்பில் இருந்து வெளி வரும் ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும் அசுரர்கள் தோன்றினர். இதனைப் பயன்படுத்தி தேவர்களைத் துன்புறுத்தினான் அசுரன். ரிஷிகள் நடத்திய யாகங்களைத் தடுத்தான். அனைவரும் உலகத்தின் தாயான பார்வதியிடம் முறையிட்டனர். உக்ர ரூபத்துடன் நாக்கை நீட்டிய படி, கோரைப் பற்களுடன் ‘ஜுவாலாமுகி’ என்ற திருநாமத்தோடு பார்வதி புறப்பட்டாள். அசுரனுடன் போரிட்டு அவனது உடம்பிலிருந்து வெளிப்பட்ட ரத்தத்தை குடித்தாள். அநீதியை அழித்து தர்மத்தைக் காக்கும் தாயாக இங்கு இருக்கிறாள்.   
சாமுண்டி மலையை அடுத்த குன்றில் சுயம்புவாக புற்றில் இருந்து வெளிப்பட்ட நிலையில் அம்மன் காட்சியளிக்கிறாள். மிகச் சிறிய வாசலுடன் குகை போல சன்னதி உள்ளது. நாக்கை நீட்டிய படியே கோபத்தோடு காட்சி தரும் அம்மனின் கைகளில் திரிசூலம், உடுக்கை, வாள், பாணம் என்னும் ரத்தம் குடிக்கும் பாத்திரம் உள்ளன. உற்ஸவ அம்மனின் முகம் சாந்தநிலையில் உள்ளது. .  தங்கையான ஜுவாலாமுகியை தரிசித்த பின்னரே சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு பக்தர்கள் செல்கின்றனர்.  வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் தீபமேற்றி வழிபட சர்ப்ப தோஷம், நாகதோஷம் விலகும். பவுர்ணமியன்று வெல்லம், தேங்காய், வாழைப்பழ கலவையை நிவேதனம் செய்து எலுமிச்சை தீபமேற்றினால் திருமணத்தடை நீங்கும்.
ஜுவாலாமுகி சன்னதியை ஒட்டி சிவபெருமானின் சன்னதி உள்ளது. அசுர வதம் செய்த பாவம் நீங்க, அம்பிகை இங்கு சிவனை வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றாள். சித்தத்தை (அறிவு) தெளிவாக்குபவர் என்பதால் ‘சித்தேஸ்வரர்’ என்றும், ராமர் வழிபட்ட சிவன் என்பதால் ராமநாதேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். விநாயகர், சுப்பிரமணியர், கால பைரவர், நாக பைவரர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.
எப்படி செல்வது
மைசூருவில் இருந்து 12 கி.மீ., துாரத்தில் உத்தனஹள்ளி
விசேஷ நாட்கள்:ஆடிபவுர்ணமி, நவராத்திரி, மகாசிவராத்திரி, சனிபிரதோஷம்
நேரம்: காலை 7:30 மணி- மதியம் 2:00 மணி, மாலை 3.00 - இரவு 9.00 மணி.
தொடர்புக்கு: 089645 - 71235
அருகிலுள்ள தலம்: மைசூரு சாமுண்டீஸ்வரி கோயில்(12 கி.மீ.,)
நேரம்: காலை 7:30 மணி- மதியம் 2:00 மணி, மாலை 3.30 - இரவு 9.00 மணி.
தொடர்புக்கு: 0821 – 259 0027

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar