காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 ஆண்டின் மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தில் வரும் 18ம் தேதி நடைபெற உள்ள திருக் கல்யாண உற்சவத்திற்காக ஞானப் பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தி சுவாமிக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜை பொருட்களை விஜயவாடா கனகதுர்கா அம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் பர்ரே ராதாகிருஷ்ணா கோயில் நிர்வாகிகள் சார்பில் கோயில் ஆஸ்தான குருக்கள் சம்மந்தம் மற்றும் கருணா குருக்களிடம் வழங்கப்பட்டது. முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள நிர்வாக அலுவல கட்டிடம் அருகில் இருந்து விஜயவாடா கனகதூர்கை அம்மன் கோயில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர் பூஜை பொருட்களை தலை மீது சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்து கோயில் அலங்கார மண்டபத்தில் ஆஸ்தான குருக்களிடம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், கனகதுர்கை அம்மன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலாவதி, சரிதா, சரோஜினி கோயில் செயல் அலுவலர் சீனா நாயக், துணை செயல் அதிகாரி வெங்கட் ரெட்டி, மேற்பார்வையாளர்கள் கல்யாணி, வேத பண்டிதர்கள் கணபதி, விஷ்ணுபட்லா, சந்தீப் ஷர்மா, அறநிலையக் குழுமத் தலைவர் ஸ்ரீகலாபத்ல சந்தீப் சர்மா மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீகாளஹஸ்தி செயல் அலுவலர் டி.பாபிரெட்டி, துணை செயல் அதிகாரிகள் என்.ஆர் கிருஷ்ணா ரெட்டி, வித்யாசாகர் ரெட்டி, மோகன், தலைமை அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.