பதிவு செய்த நாள்
28
ஜன
2021
10:01
திருச்சி: திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல், மாதத்துக்கு இருமுறை எண்ணப்படும். நேற்று கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, இணை கமிஷனர் அசோக்குமார் முன்னிலையில், காணிக்கைகள் எண்ணப்பட்டன. 50க்கும் மேற்பட்டோர், இந்த பணியில் ஈடுபட்டனர்.இதில், 90 லட்சத்து, 7,494 ரூபாய் ரொக்கம், 140 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள், 2.142 கிலோ தங்கம், 4.174 கிலோ வெள்ளி ஆகியவற்றை, பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியது தெரிந்தது.