பதிவு செய்த நாள்
28
ஜன
2021
10:01
ராஜபாளையம் : ராஜபாளையம் சம்மந்தபுரம் ராமசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர் , ஆழ்வார் திருநகர் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் உட்பட ஏராளமான பங்கேற்றனர்.
இதை முன்னிட்டு ஜன.25 காலை முதல் ஹோமம், யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்துநேற்று காலைபரிவார சன்னதிகள், விமானம், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ராமானுஜர் மற்றும் ராஜகோபுரத்திற்கு மகா கும்பாஷேகம் நடந்தது.தொடர்ந்து வேதபாராயணம் நடக்க கும்ப நீர் தெளிக்கப்பட்டது. அன்னதானமும் நடந்தது. விழா நாட்களில் தினமும் மாலை உபன்யாசம் நடைபெற்று வருவதுடன், இன்று ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம், நாளை(ஜன.29) திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. வத்திராயிருப்பு: சுந்தரபாண்டியம் தெற்கு மேலத்தெரு குஞ்சுமாட சுவாமிமற்றும் பத்திரகாளியம்மன் கோயிலில் கும்பாபிேஷகம் நடந்தது. இதைமுன்னிட்டு விக்னேஷ்வர பூஜை, ரக்ஷாபந்தானம், யாகசாலை பூஜைகள், மகாபூர்ணாஹீதி நடந்ததுகோபுரம், மூலஸ்தானம், பரிவார தெய்வங்களுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.