பதிவு செய்த நாள்
28
ஜன
2021
10:01
சென்னை - திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில், இன்று காலை, தடாக பிரதிஷ்டை நடக்கிறது.மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு பெற்றது, திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடை அம்மன் கோவில். இக்கோவிலில் ஆதிசேஷ தடாகமானது, ஈசான்ய மூலையில் அமைந்துள்ளது. சமீபத்திய தொடர் மழை காரணமாக, இந்த தடாகத்தில் நீர் நிரம்பிஉள்ளது.சைவ ஆகமங்களில் பல நாட்கள் நீர் இல்லாமல் நிரம்பினால், ஆலய பிரதிஷ்டை போல், தடாக பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். தடாகத்தில் நதி தேவதைகள், இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன் போன்றோர் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. அவர்களை பூஜை, ஹோமம், பலிதானம் செய்து, திருப்தி செய்யும் பழக்கமும் உள்ளது. அவ்வாறு செய்தால், சகல பாக்கியங்களும் கிடைப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.எனவே, தை பூசம் தினமான இன்று காலை, 9:00 மணி முதல், 12:00 மணிவரை, தடாக பிரதிஷ்டை நடத்தப்படுகிறது. நாளை தெப்ப உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவிக் கமிஷனர் சித்ராதேவி செய்து வருகிறார்.