Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ... ஐயப்பன் கோயிலில் அமாவாசை வழிபாடு ஐயப்பன் கோயிலில் அமாவாசை வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்ன காஞ்சிபுரத்தில் மந்த்ராலய மடம் துவக்கம்
எழுத்தின் அளவு:
சின்ன காஞ்சிபுரத்தில் மந்த்ராலய மடம் துவக்கம்

பதிவு செய்த நாள்

12 பிப்
2021
10:02

 மதுரை:சின்ன காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கிழக்கு மாட வீதியில், மந்த்ராலய மடம் துவக்கப்பட்டுள்ளது. மந்த்ராலய வேதசபா நிகழ்ச்சியை, காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் துவக்கி வைத்து அருளுரையாற்றினார்.

மந்த்ராலய மடத்தின் தலைவர் சுபுதேந்திர தீர்த்தர், அழகிய மணவாள ஜீயர், வேத பண்டிதர்கள், வரதராஜ சுவாமி கோவில் பட்டாச்சார்யார்கள் பங்கேற்றனர். சுபுதேந்திர தீர்த்தர் பேசியதாவது: கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமமானது போன்று இங்கு சைவம், வைணவம், மாத்வம் ஆகிய மூன்று சம்பிரதாயங்கள் சங்கமமாகி உள்ளன.

வேதம் படித்தவர்களை நாம் போற்ற வேண்டும், ஆதரிக்க வேண்டும். மந்திரம், கோவில் போன்றவை நம் கலாசாரத்தின் முக்கிய அங்கங்கள்; அவற்றை வளர்க்க வேண்டும். எத்தனை கட்டடங்கள் கட்டியுள்ளோம், எவ்வளவு செல்வம் சேர்த்துள்ளோம் என்பது முன்னேற்றத்திற்கான அளவுகோல் அல்ல. கலாசாரத்தை எவ்வளவு கடைப்பிடிக்கிறோம், வேதத்தில் எவ்வளவு கற்றுள்ளோம் என்பதே முன்னேற்றம். வேத தர்மத்தை காப்பது நம் கடமை.இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து ரிக் வேதத்தின் விக்ருதிபாதம், யஜுர் வேதத்தின் லட்சண பாதம் குறித்து விளக்கினார். சுவாமிகள் சுற்றுப்பயணம்விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிப்., 13, 14ல் சென்னை குரோம்பேட்டை சங்கர்லால் ஜெயின் தெருவில் உள்ள வேத பாடசாலையில் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். பிப்., 15ல் திண்டிவனம் ஓமந்துார் ஸ்ரீராம் பள்ளிக்கும், மறுநாள் திருவானைக்கோவில் சங்கர மடம் வித்யாஸ்தானத்திற்கும் விஜயம் செய்கிறார். பிப்., 17, 18ல் சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடியில் உள்ள சங்கர மடத்திலும், பிப்., 19 முதல், 25 வரை ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் சங்கர மடத்திலும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி வழங்குகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar