Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புல்லாணியில் ரத சப்தமி ... வடிவேல்கரையில் நாயக்கர் கால கலுங்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு வடிவேல்கரையில் நாயக்கர் கால கலுங்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூரில் தென்பெண்ணைக்கு ஆரத்தி வழிபாடு
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூரில் தென்பெண்ணைக்கு ஆரத்தி வழிபாடு

பதிவு செய்த நாள்

20 பிப்
2021
04:02

திருக்கோவிலூர்: அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் தென்பெண்ணை நதி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார பாதயாத்திரை குழுவினர் திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் ஆரத்தி வழிபாடு நடத்தினர்.

நதியை நம் முன்னோர்கள் புனிதமாகவும், தாயாகவும், பண்பாட்டின் அடையாளமாகவும் கருதி பாதுகாத்து வந்தனர். நாகரீக உலகில் கழிவுகளை வெளியேற்றும் இடமாகவும், குப்பைகளை கொட்டும் மையமாகவும், மணல் மாபியாக்களின் கூடாரமாகவும் குறிப்பாக தென்பெண்ணையாறு மாறி வருகிறது. இதன் காரணமாக நதி மாசுபட்டு, நிலத்தடி நீர் குறைந்து, சுற்றுச்சூழல் பெரும் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளது. நதியை மாசுபடுத்துவதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அகில பாரதிய சன்யாசிகள் சங்கம் தென்பெண்ணை நதி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார பாதையாத்திரை என்ற பெயரில் பயணத்தை கடந்த மாதம் 31ம் தேதி தென்பெண்ணை உருவாகும் கர்நாடக மாநிலம், நந்தி மலையில் இருந்து புறப்பட்டு திருக்கோவிலூர் வழியாக வரும் 25ம் தேதி கடலூரில் தென்பெண்ணை சங்கமிக்கும் வங்கக் கடலை சென்றடை கின்றனர்.

திருக்கோவிலூர் வந்த இக்குழுவினருக்கு திருக்கோவிலூர் மற்றும் அரகண்டநல்லூர் பகுதியை சேர்ந்த ஆன்மீக அன்பர்கள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. பாதையாத்திரை தலைவர் மேலமங்கலம் ஸ்ரீலஸ்ரீ குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், ஒருங்கிணைப்பாளர் சுவாமி காளீஸ்வரானந்த சரஸ்வதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தென்பெண்ணையில் மாலை 6:30 மணி அளவில் நதிக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆரத்தி வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar