Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேர்வராயன் கோவிலில் விசாகத் ... இன்று குமரகுருபரர் குருபூஜை! இன்று குமரகுருபரர் குருபூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி கோவிலில் ஆதீனங்களுக்கு மரியாதை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2012
10:06

மதுரை: மதுரை ஆதீன மடத்தில் நடந்த குருபூஜை விழாவிற்காக, மீனாட்சி அம்மன் கோவில் சார்பில், ஆதீனங்களுக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டன. ஆதீன மடத்தில் குருபூஜை விழாவை முன்னிட்டு, நேற்று காலை, 4.30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து சிவாச்சாரியார்கள், அறநிலையத்துறை அலுவலர்கள், காராம்பசு மற்றும் மேள தாளங்களுடன், இரண்டு ஆதீனங்களையும், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, பேஷ்கார் மற்றும் கோவில் சார்பில், மரியாதை கொடுக்கப்பட்டன. நூற்றுக்கும் அதிகமான பக்தர்களும், ஆதீனங்களுடன் அம்மன், சுவாமி சன்னிதிக்குள் செல்ல முயன்றனர். அப்போது, சில பட்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது. இளைய ஆதீனம் நித்யானந்தா, பக்தர்களை அமைதிப்படுத்தினார்.

பரிவட்டம்: மூத்த ஆதீனம் அருணகிரிக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. தொடர்ந்து, நாகூர் சன்னிதியில் சிறப்பு பூஜை மற்றும் தேவாரம், திருவாசகம் பாடல்களும், நாதஸ்வர கச்சேரியும் நடந்தன. இதில் பங்கேற்ற பின் ஆதீனங்கள், கோவிலில் இருந்து யானை மற்றும் அனைத்து மரியாதைகளுடன் மடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

எதிர்ப்பு: மதுரை ஆதீன மீட்புக்குழுவினர், நேற்று மடத்திற்கு சென்று வழிபாடு நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால், ஜான்சிராணி பூங்கா அருகில் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி, பூஜைகள் நடத்தினர். தொடர்ந்து, மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று, மதுரை ஆதீனத்தை மீட்கும்படி, சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன், தேவர் தேசிய பேரவை திருமாறன், மீனாட்சி பிள்ளை அமைப்பு ஜானகிராமன், ஆலவாய் அங்கயற்கண்ணி பக்தர்சபை மாரிச்சாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைக் கார்த்திகை, தெப்பம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: தை கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar