Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமூர்த்தி அணையில் புதைந்துள்ள ... மதுரை மீனாட்சி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேர்வராயன் கோவிலில் விசாகத் தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2012
10:06

சேலம்: ஏற்காடு, சேர்வராயன் கோவிலில், வைகாசி தேரோட்டம் நடந்தது. சேலம் மாவட்டம், ஏற்காடு அடுத்த மஞ்சக்குட்டை கிராமம், சேர்வராயன் மலையில் எழுந்தருளியுள்ள சேர்வராயன் ஸ்வாமி வைகாசி உற்சவ விழா, கடந்த 28ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை சிறப்பு தீபாராதனைகள், பூஜைகள் நடந்தது. தேர்த் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை ஸ்வாமிக்கு சிறப்பு தீபாராதனைகள், பூஜைகள் நடந்தது. ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 2.30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில், காவேரித் தாயுடன் சேர்வராயன் ஸ்வாமி எழுந்தருளினார். தொடர்ந்து, தேரோட்டம் நடந்தது. ஏற்காடு ஒன்றிய சேர்மன் அண்ணாதுரை, துணை சேர்மன் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயன், அழகிரிநாதர் கோவில் தக்கார் முருகன், கவுன்சிலர் மணி முத்து, ஒன்றிய அ.தி.முக., துணை செயலாளர் ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய செயலர் பிலிப்பான் ஆகியோர் தேரோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைத்தனர். தேர், மலையைச் சுற்றி வந்து நிலையை அடைந்தது. தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று (6ம் தேதி) மதியம் 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. பெண் பக்தர்கள் அவதி ஆண்டுதோறும் நடக்கும் வைகாசி உற்சவ விழாவில், ஏற்காடு மலையில் உள்ள, 67 கிராமங்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்வர். பக்தர்களின் வசதிக்காக குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி செய்யவில்லை. அதனால், பெண் பக்தர்கள் சிரமமடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar