Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லிகுளங்கரை பகவதி அம்மன் கோவில் ... அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓய்வு பெற்ற அர்ச்சகர்களுக்கு திருமலையில் பணி
எழுத்தின் அளவு:
ஓய்வு பெற்ற அர்ச்சகர்களுக்கு திருமலையில் பணி

பதிவு செய்த நாள்

04 ஏப்
2021
03:04

 திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஓய்வு பெற்ற அர்ச்சகர்களுக்கு, மீண்டும் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருமலை ஏழுமலையான் கோவிலில், நான்கு குடும்பங்களைச் சேர்ந்த அர்ச்சகர்களின் வம்சாவளியினருக்கு மட்டுமே, கோவிலில் சேவை செய்யும் உரிமை வழங்கப்படுகிறது.

இந்த குடும்பங்களைச் சேர்ந்த அர்ச்சகர்களை, இரண்டு குடும்பங்களுக்கு ஒரு முறை என சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர்களில் ஒருவர் தலைமை அர்ச்சகராகவும் செயல்படுவார். தலைமை அர்ச்சகரின் தலைமையில், ஏழுமலையான் கைங்கரியங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், தேவஸ்தானத்தில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கும் ஓய்வு பெறும் வயதை நிர்ணயிக்கப்பட்டு, அவர்களுக்கு பணி ஓய்வு அளிக்கப்பட்டது.ஆனால் அர்ச்சகர்கள் பலர், தங்கள் குடும்பங்கள் ஏழுமலையான் சேவைக்கே அர்ப்பணிக்கப்பட்டதால், தாங்களால் இயன்ற வரையில் சேவை செய்யும் வாய்ப்பு வழங்க வேண்டும் என, ஆந்திர அரசிடம் முறையிட்டனர். இதை பரிசீலித்த, ஆந்திர அரசு, அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும்படி, தேவஸ்தானத்திற்கு உத்தரவிட்டது.அதன்படி, ஓய்வு பெற்ற அர்ச்சகர்களை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன்படி, தலைமை அர்ச்சகராக பணியிலிருந்து ஓய்வு பெற்ற ரமண தீட்சிதர், மீண்டும் அதே பணியில் நியமிக்கப்பட உள்ளார். இந்நிலையில், தற்போது பணியில் உள்ள தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் மீண்டும் பணியில் தொடர்வாரா என்பது குறித்து விளக்கப்படவில்லை. இதனால், அர்ச்சகர்களிடையே குழப்பமான சூழல் நிலவி வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயிலில், 21ம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை மங்கம்மாள் கேணி பூக்குழி திடலில் நுாறாண்டுகள் கடந்த பழமை வாய்ந்த சர்வ சக்தி விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar