பதிவு செய்த நாள்
10
ஏப்
2021
10:04
மேட்டுப்பாளையம்: தேவி கருமாரியம்மன் கோவிலில், அக்னி கம்பம் நடும் விழா நடந்தது.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, சக்தி விநாயகர் கோவிலில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலும், தேவி கருமாரியம்மன் கோவிலும் உள்ளன. இங்கு வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் விழாவும், தேவி கருமாரியம்மன் கோவில், அக்னி கம்பம் விழாவும் துவங்கியது. கடந்த, 6 ம் தேதி பூச்சாட்டும், இரவு அக்னி கம்பம் நடும் விழா நடந்தது. கம்பத்தை சுற்றி மேளம் அடித்தும், பக்தர்கள் ஆடியும் வருகின்றனர். நேற்று 9 ம் தேதி சக்தி விநாயகருக்கு சிறப்பு அலங்கார பூஜை செய்யப்பட்டது. 13 ம் தேதி நடூர் மாரியம்மன் கோவிலில் இருந்து, தாரை, தப்பட்டை முழங்க, திரிசூலம் எடுத்து வருதலும், அன்று சிவபெருமான், தேவி கருமாரியம்மன் அழைப்பும் நடைபெற உள்ளது. அடுத்து, 14 ம் தேதி அம்மனுக்கு அலங்கார பூஜையும், அன்னதானமும், மாவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. 15 ம் தேதி மாலை கிரிமலைக்கு புறப்படுதலும், 16 ம் தேதி பூண்டி அடிவாரத்தில் அபிஷேக பூஜையும், அன்னதானமும் நடைபெற உள்ளது. மேட்டுப்பாளையம் வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பில், விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.