Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலாடா சித்தி விநாயகர் கோவில் ... மாதேஸ்வரன் கோவில் தேரோட்டம் ரத்து: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் வாகனத்தில் எடுத்து செல்லப்படும்: ஊர்வலம் ரத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2021
05:04

ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில், இன்று காலை முதல், இரவு வரை, சுவாமி தரிசனத்துக்கு மட்டும், பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து கலெக்டர் கதிரவன் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், சின்ன மாரியம்மன் கோவில், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் கம்பங்களுக்கு தண்ணீர், பால் ஊற்ற அனுமதி இல்லை. இன்று காலை, 6:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். பூஜை பொருட்களுக்கு அனுமதியில்லை. அதேசயம் கம்பம் எடுத்தல் நிகழ்வு, நாளை மாலை 3:00 மணி என்பது, அதிகாலை, 5:00 மணிக்கு மாற்றப்படுகிறது. இதில் பூசாரிகள் மட்டுமே பங்கேற்க அனுமதி. கம்பம் எடுக்கும் நிகழ்வு நடத்தப்பட்டு, மூன்று கம்பங்களும் வாகனத்தில் ஏற்றப்பட்டு, காவிரி ஆற்றில் விடப்படும். மக்களுக்கு அனுமதி இல்லை. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கம்பம் செல்லும் பாதை: பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் கம்பம், நாளை (திங்கள்) அதிகாலை, 5:00 மணிக்கு ஒரே நேரத்தில் பிடுங்கப்பட்டு, மணிக்கூண்டில் ஒன்று சேர்ந்து லாரியில் ஏற்றப்படுகிறது. அங்கிருந்து அக்ரஹார வீதி, மகாசன பள்ளி வழியாக, கச்சேரி வீதி, பி.எஸ்.பார்க், ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜர் வீதி, மீனாட்சி சுந்தரனார் சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா, மேட்டூர் சாலை, ஸ்வஸ்திக் ரவுண்டானா, எல்லை மாரியம்மன் கோவில் சாலை சந்திப்பு, மஜீத் வீதி, கருங்கல் பாளையம் வழியாக சென்று, காவிரி ஆற்றில் விடப்படுகிறது. கம்பம் எடுத்து செல்லப்படும் வாகனம் எங்கும் நிறுத்தப்படமாட்டாது. அதிகபட்சம் இரண்டு மணி நேரத்தில் நிகழ்ச்சி முடிந்து விடும். இதில், 20 பேர் மட்டுமே பங்கேற்பர். கொரோனா தடுப்பு விதிமுறையை கடைப்பிடித்து, கம்பத்தை பக்தர்கள் தரிசனம் மட்டும் செய்யலாம். இத்தகவலை, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar