Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழ் புத்தாண்டு கோவில்களில் ... மதுரை சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது மதுரை சித்திரை பெருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நோய் தாக்கம் ஜூனில் குறையும்: பிலவ பஞ்சாங்கத்தில் கணிப்பு
எழுத்தின் அளவு:
நோய் தாக்கம் ஜூனில் குறையும்: பிலவ பஞ்சாங்கத்தில் கணிப்பு

பதிவு செய்த நாள்

15 ஏப்
2021
10:04

 மதுரை,: நோய் தாக்கம் ஜூனில் குறையும் என, பிலவ தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. பிலவ ஆண்டு பிறந்ததை முன்னிட்டு, நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், முதல் ஸ்தானீக பட்டர் ஹாலாஷ்ய நாத பட்டர், அம்மன், சுவாமி சன்னிதியில் பஞ்சாங்கத்தை வைத்து பூஜித்து, அதன் பலன்கள் குறித்து வாசித்தார்.

அவர் கூறியதாவது: பிலவ ஆண்டில், குறைந்த மழை பெய்யும். தொற்று நோய்கள் அதிகரிக்கும். நாட்டில் பொய், சூது அதிகரிக்கும். அரசின் நடவடிக்கையால் மக்கள் புண்படுவர். நலமற்ற வாழ்வு உண்டாகும். நான்கு கால் பிராணிகள் நோயால் நாசமடையும்.வேளாண் தொழில் குறையும். பசுக்களுக்கு நோய் ஏற்பட்டு, பால் உற்பத்தி குறையும். நாட்டில் சுமுகமான சூழல் நிலவாது.இவ்வாறு, அவர் கூறினார். இந்த பலன்கள் பலிக்கக் கூடாது. எழுத்து வடிவமாகவே இருந்துவிட வேண்டும் என அம்மன், சுவாமி சன்னிதியில் பிரார்த்தனை செய்யப்பட்டது.

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் முடிந்ததும், கோவில் குருக்கள் சிவமணி பஞ்சாங்கம் வாசித்து கூறியதாவது:இந்தாண்டு வங்க கடலில், 15 காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, ஒன்பது பலவீனமாகி, ஆறு புயலாக வீசும். தமிழகத்தில் அனைத்து அணைகளும் நிரம்பும்; விவசாயம் பெரிதும் பாதிக்கும்.உலகளவில் கல்வி வளர்ச்சியில் இந்தியா முதலிடம் பிடிக்கும். சீனா, பாகிஸ்தானுடன் எல்லைப் பிரச்னை ஏற்படும். பல புதிய நோய்கள் தாக்கும். இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் வரும். இவ்வாறு, அவர் கூறினார்.

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வாசித்த பஞ்சாங்கத்தின் பலன்கள்: நெல், தானியங்கள் உள்பட அனைத்து விளைச்சல்களும் அதிகளவில் இருக்கும். நோய் தாக்கம், ஜூனில் முற்றிலும் அகலும். புதிய கொடிய நோய்கள் இல்லை. அனைவரும் கல்வியில் சிறந்த மேன்மை அடைவர். மக்கள் சுபிட்சம் பெறுவர். சனிப்பெயர்ச்சி இல்லை. குரு பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி உண்டு. கிரஹணங்கள் இல்லை. இயற்கை இடர்பாடுகள் இல்லை. கால நிலை சீராக இருக்கும். எண்ணெய் சார்ந்த தொழில்கள் ஏற்றம் இருக்கும். மேஷம், விருச்சிகம், கடக ராசிகள் அதிக நன்மை பெறும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவின் தொடர்ச்சியாக இன்று தீர்த்தவாரி ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் தாயார் பூச்சாற்று உற்சவம், வெளிக்கோடை 5ம்நாளில் சிறப்பு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தேரழந்தூர் ஆமருவியப்பன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ஏப்.,4ல் புதிதாக ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோத்சவம், 11ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar