Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக நன்மை வேண்டி அகல் விளக்கு பூஜை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் கருட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனா அரக்கன் வீழ்ந்து ஒழியட்டும்: கோவில்களில் பக்தர்கள் பிரார்த்தனை!
எழுத்தின் அளவு:
கொரோனா அரக்கன் வீழ்ந்து ஒழியட்டும்: கோவில்களில் பக்தர்கள் பிரார்த்தனை!

பதிவு செய்த நாள்

16 ஏப்
2021
02:04

திருப்பூர் : கொரோனா அரக்கனை அடியோடு அழித்து, உலகை காக்க வேண்டுமென, கோவில்களில் தீபம் ஏற்றிவைத்து, பக்தர்கள் மனமுருக வழிபட்டனர்.

திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில், சிறப்பு அபிேஷகம் நடந்தது. அம்மனுக்கு, ரூபாய் நோட்டுகளால், அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மா, பலா, வாழை என முக்கனிகள் படைக்கப்பட்டிருந்தது.வாலிபாளையம் ஸ்ரீகல்யாணசுப்பிரமணியர் கோவிலில், தேவியருக்கும் மூலவருக்கும் மகா அபிேஷகம் நடந்தது. அதனை தொடர்ந்து, கல்யாண சுப்பிரமணியர், நீலப்பட்டு அலங்காரத்தில் அருள்பாலித்தார். முலாம்பழம், ஆப்பிள், அன்னாசி, வெள்ளரி, பலா, மாதுளை, தர்பூசணி, ஆரஞ்சு உள்ளிட்ட பழவகைகள் படைக்கப்பட்டிருந்தது.

முக்கனி படைப்பு: போலீஸ் லைன் மாரியம்மன் கோவிலில் இருந்து, தீர்த்தக்குடங்கள் முத்திரிக்கப்பட்டு, அருகே உள்ள விநாயகர் கோவில்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. ஊர்வலமாக சென்ற பக்தர்கள், தீர்த்தத்தால், விநாயகருக்கு அபிேஷகம் செய்து, கொரோனாவில் இருந்து உலகை காக்க வேண்டுமென வேண்டிக் கொண்டனர். மாரியம்மன் மஞ்சள்காப்பு அலங்காரத்தில், எலுமிச்சங்கனி மாலை அணிந்து அருள்பாலித்தார்.

கோல்டன்நகர் கருணாகரபுரி ஸ்ரீசக்திவிநாயகர் கோவிலில், தீர்த்தக்குட அபிேஷகமும், தங்ககவச அலங்காரமும் நடந்தது.அணைக்காடு, சிவசக்தி விநாயகர், ஸ்ரீமாரியம்மன் கோவிலில், அதிகாலை, 6:00 மணிக்கு மகா அபிேஷகம் நடந்தது. அதை தொடர்ந்து, மாரியம்மன், சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

அரண்மனைப்புதுார் ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில், தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரபூஜைகள் நடந்தன. இதேபோல், விநாயகர் கோவில், அம்மன் கோவில் மற்றும் முருகன் கோவில்களில், அதிகாலையில் அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தன.

மகாபிேஷகம்: தொங்குட்டிபாளையம், சுயம்பு காரணப்பெருமாள் கோவிலில், பக்தர்கள் வழிபட்டனர். தமிழ்புத்தாண்டையொட்டி, வெள்ளி கவச அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். கோவில்வழி பெரும்பண்ணை வரதாராஜ பெருமாள் கோவிலில், தாயார்களுக்கும், எம்பெருமாளுக்கும் மகா அபிேஷகம் நடந்தது. பக்தர்கள், முக்கனி உள்ளிட்ட பழவகைகளை எடுத்து வந்து, பெருமாளுக்கு படைத்து வழிபட்டனர். காலை, 8:00 மணிக்கு, ஸ்ரீபிலவ ஆண்டு பஞ்சாங்கள் வாசிக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனத்துக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்தபடி சென்று, தரிசனம் செய்து வழிபட்டனர்.கொரோனா அரக்கனை அடியோடு அழித்து, உலகை காக்க வேண்டுமென, வேண்டுதல் நடத்தி, பெண்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: 2533 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, ஸ்ரீசத்ய வெங்கட் சூர்ய ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  அட்சய திருதியையொட்டி, கும்பகோணத்தில் ஒரே இடத்தில்  12 பெருமாள் கருட சேவை வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேர் அலங்கரிப்பதற்காக பந்தக்கால் ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் கண்ணை கவரும் வேலைபாடுகளுடன் கூடிய சல்லடம் எனும் ஆடை அணிந்து ... மேலும்
 
temple news
கோவை; சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரம் மற்றும் அட்சய திருதியை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar