Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி கோவில்களில் அன்னதானம் ... விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் சிறப்பு வழிபாடு விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் அர்ச்சகர், பணியாளர்களுக்கு உதவித்தொகை: முதல்வர் துவக்கம்
எழுத்தின் அளவு:
கோவில் அர்ச்சகர், பணியாளர்களுக்கு உதவித்தொகை: முதல்வர் துவக்கம்

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2021
10:06

ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், மாத சம்பளமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு, நிவாரண உதவித்தொகை, 4,௦௦௦ ரூபாய், 10 கிலோ அரிசி மற்றும், 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தையும், முதல்வர் துவக்கி வைத்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக, கோவில்களில் மாத சம்பளம் இல்லாமல் பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள், இதர பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு, 4,000 ரூபாய் உதவித்தொகை, 10 கிலோ அரிசி, 15 வகை மளிகை பொருட்கள் வழங்க, உத்தரவிடப்பட்டது.

அதன்படி, கோவில் பணியாளர்களுக்கு, உதவித்தொகை, அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.திருமுல்லைவாயில், பிடாரி எட்டியம்மன் கோவில், பிடாரி பொன்னியம்மன் கோவில்; சென்னை, பூங்காநகர், கந்தகோட்டம் முத்துக்குமாரசுவாமி கோவில், அத்திப்பட்டு கிருஷ்ணசாமி பெருமாள் கோவில், சென்னமல்லீஸ்வரர் மற்றும் சென்னகேசவப் பெருமாள் கோவில், பைராகிமடம் திருவேங்கட முடையார் வெங்கடேசப் பெருமாள் கோவில் ஆகியவற்றில் பணியாற்றும், 12 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் பூசாரிகளுக்கு, ஊக்கத்தொகை, அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்புகள் வழங்கப்பட்டன.ரேஷனில், அரிசி கார்டுதாரர்களுக்கு, கொரோனா பாதிப்பு நிவாரணத்தின் இரண்டாம் தவணையாக, 2,000 ரூபாய்; அத்தியாவசிய, 14 மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டமும், நேற்று துவக்கி வைக்கப்பட்டது.தி.மு.க.,வின் சட்டசபை தேர்தல் அறிக்கையில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கருணாநிதி பிறந்த நாளான, ஜூன், 3 முதல், 4,000 ரூபாய் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தி.மு.க., ஆட்சி அமைத்ததும், கொரோனா நிவாரணத் தொகை, முதல் தவணையாக, 2,000 ரூபாய், 2.09 கோடி ரேஷன் அரிசி கார்டுதார்களுக்கு, மே மாதம் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இம்மாதம், 4,196.38 கோடி ரூபாய் செலவில், 2.09 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, கொரோனா நிவாரணத்தின் இரண்டாம் தவணையாக, 2,000 ரூபாய் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.அத்துடன், அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு, 844.51 கோடி ரூபாய் செலவில், அத்தியாவசிய, 14 மளிகை பொருட்கள் அடங்கிய, மளிகை தொகுப்பு வழங்கும் திட்டமும் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள், மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, பெரியசாமி, சக்கரபாணி, தலைமைச் செயலர் இறையன்பு, டி.ஜி.பி., திரிபாதி, செய்தித்துறை செயலர் மகேசன் காசிராஜன், அறநிலையத்துறை செயலர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலர் முகமது நசிமுதீன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த காலமாக, மகாளய பட்சம் கருதப்படுகிறது. இக்காலத்தில் தர்ப்பணம் செய்தால், ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி ; திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி பத்மநாபபுரம் ... மேலும்
 
temple news
கோவை ; கோவை, நேரு ஸ்டேடியம் ஆடிஸ்வீதி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா அக்., 3ல் ஆனந்தவல்லி ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில் நவராத்திரியை பெருவிழாவை முன்னிட்டு, சக்தி கொலுவுடன் பத்து நாள் விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar