Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் பௌர்ணமி ... வீரமா காளியம்மன் கோயில் திருவிழா துவக்கம் வீரமா காளியம்மன் கோயில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூ.15 கோடி ஐம்பொன் சிலைகள் கைப்பற்றிய அறநிலைய துறை
எழுத்தின் அளவு:
ரூ.15 கோடி ஐம்பொன் சிலைகள் கைப்பற்றிய அறநிலைய துறை

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2021
04:06

விருதுநகர் : மகமாயி அம்மன் கோவிலுக்கு சொந்தமான, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 10 ஐம்பொன் சிலைகளை ஹிந்து அறநிலைய துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பி.புதுப்பட்டியில், மகமாயி அம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை ஒட்டி, மூன்று நாள் திருவிழா நடப்பது வழக்கம். அந்நேரத்தில், கோவில் பூஜாரி தன் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் மகமாயி அம்மன், வீரபத்திரர் விநாயகர், கருப்பசாமி, ராக்காச்சி அம்மன்.நடராஜர், சிவகாமி அம்மன், இருளப்ப சுவாமி, முத்து கருப்பசாமி ஐம்பொன் சிலைகளை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து சென்று, சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்வது வழக்கம்.

இக்கோவில், 1995ல் ஹிந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்ததை தொடர்ந்து, நான்கு ஆண்டுகளுக்கு முன், சென்னையில் இருந்து வந்த தொல்லியல் துறையினர், ஐம்பொன் சிலைகளை ஆய்வு செய்தனர்.சிலைகள், 400 ஆண்டுகள் பழமையானது என்றும்; மதிப்பு, 15 கோடி ரூபாய் இருக்கும் எனவும் தெரிவித்தனர். பின், பூஜாரி வீட்டின் பாதாள அறையில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று கோவில் தக்கார் தேவி தலைமையில், காரியாபட்டி போலீசார் முன்னிலையில், அறநிலைய துறை அதிகாரிகள், பூஜாரி வீட்டில் இருந்த ஐம்பொன் சிலைகளை கைப்பற்றினர்.பரம்பரை பரம்பரையாக பூஜை செய்து வரும் மூர்த்தி பூஜாரி, சுவாமி சிலைகளை எடுத்து செல்லக் கூடாது. முன்னோர்கள் உருவாக்கிய ஐம்பொன் சிலைகளை நாங்கள் பத்திரமாக பாதுகாத்து வருகிறோம் எனக் கூறி கதறி அழுதார்.மேலும், அதிகாரிகளுக்கு அவர் சாபமிட்டார். 10 ஐம்பொன் சிலைகளும், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar