Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாவூற்று வேலப்பர் கோயிலில் ... உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காணிக்கையை நம்பியே வாழ்க்கை அரசுக்கு பூசாரிகள் கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2021
04:07

பல்லடம்: பக்தர்களின் காணிக்கையை நம்பியே வாழ்க்கை நடத்தி வருவதால், பணியை நிரந்தரமாக்க வேண்டும் என, கோவில் பூசாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூசாரிகள் நலச்சங்க மாநிலத் தலைவர் வாசு விடுத்துள்ள அறிக்கை: இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டு, ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் பூசாரிகள், பக்தர்கள் அளிக்கும் காணிக்கையை நம்பி குடும்பம் நடத்தி வருகின்றனர். நிரந்தர ஊதியம் இல்லாததால், இதுபோன்ற பூசாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. கொரோனா காலத்தில் அரசு வழங்கிய நிவாரண உதவிகள், பொருட்கள் பூசாரிகளுக்கு பெரும் உதவியாக அமைந்தது. கடந்த காலங்களில், பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஊரடங்கு காரணமாக, கோவில்கள் திறக்கப்படாததால், தமிழகம் முழுவதும் பக்தர்கள் அளிக்கும் காணிக்கையை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான பூசாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், ஐந்து ஆண்டுக்கு மேல் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என, அறநிலையத்துறை அமைச்சர் சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி, பூசாரிகளை பணிநிரந்தரம் செய்வதுடன், அவர்களுக்கு மாத ஊதியம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar