விருதுநகர் : மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் போன்றவற்றில் வழிபட தடை விதிக்கப்பட்டிருந்தது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட உள்ளன.இந்நிலையில் நேற்று கோயில்களில் வளாகத்தை சுத்தம் செய்வது, கூரைகளில் ஓட்டடைகள் அடிப்பது, பக்தர்கள் வந்து செல்லும் பாதைகளில் கிருமி நீக்கம் செய்வது உள்ளிட்ட துாய்மை பணிகள் நடந்தன. ஒன்றரை மாதத்திற்கு பிறகு கோயில்களில் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஆர்வமாக உள்ளனர்.