ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் முன் அரங்கன் பாதுகாப்பு பேரவையினர் போராட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2021 07:07
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு நியமிக்கப்படும் அறங்காவலர் குழு தலைவர் உள்ளிட்ட அனைத்து அறங்காவலர்களும்¸ உயர்நீதிமன்ற தீர்ப்பின் படியும்¸ இந்து சமய அறநிலையத்துறை விதிமுறைகளின் படியும்¸ இந்து சமய அறநிலையத்துறை விதிமுறைகளின் படியும் நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரங்கன் பாதுகாப்பு பேரவை சார்பில் நேற்று ஸ்ரீரங்கம் கீழ உத்திரை வீதியில் உள்ள வெள்ளை கோபுரம் அருகில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு அரங்கன் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் அனந்த பத்மநாபன் தலைமை தாங்கினார். இதில் தலைவர் செல்லப்பா¸ துறவிகள் பேரவை மாநில அமைப்பாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது¸ அறங்காவலர்கள் குழு தலைவர் உள்ளிட்ட அறங்காவலர் குழுவினர் ஸ்ரீரங்கம் கோயில் பழக்கவழக்கங்கள் மற்றம் சம்பிரதாயங்கள் மற்றும் வைணவ மரபுகளை அறிந்த உள்ளூர்க்காரர்கள் மட்டுமே அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும். மூலவர் அமைப்பினை மாற்றியது மற்றும் சுற்று கோயில்களில் இருந்த ரூபங்களை அப்புறப்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து உரிய அறிக்கை அரசுக்கு அனுப்பிடவும்¸ நிலங்கள் பெயர் மாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு நேரடியாக ஐ.ஏ.எஸ் அதிகாரியை நிர்வாக அதிகாரியை நியமித்து நிர்வாக சீர்கேடுகளை களைய வேண்டும். தரிசனத்திற்காக கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் நடைபெறும் கட்டணக் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்தி¸ கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினார்கள்.