சிதம்பரம் நடராஜர் ஆனிதிருமஞ்ன விழா: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2021 09:07
சிதம்பரம்: கொரோனா பரவல் காரணமாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று துவங்கும் ஆனிதிருமஞ்சன விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர் மற்றும் தரிசன விழாவும் கோவிலுக்குள் நடத்திக்கொள்வதாக தீட்சிதர்கள் முடிவு எடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொறு ஆண்டும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்படும். இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா, இன்று காலை 6 ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 7 மணியில் இருந்து 8 மணிக்குள் உற்சவ ஆச்சாரியார் பிரம்மஸ்ரீ கனகசபேச தீக்ஷிதர், கொடி ஏற்றி துவக்கி வைக்கிறார். வரும் 14 ம் தேதி தேர் திருவிழாவும், 15 ம் தேதி ஆனிதிருமஞ்சன தரிசன விழாவும் நடைபெற உள்ளது. கொரோனா விதிமுறை காரணமாக கொடி ஏற்ற விழாவிற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என பொது தீட்சிதர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக குறை நபர்களை கொண்டு கொடி ஏற்று விழாவை முடிக்க கோவில் பொது தீட்சிதர்கள் முடிவு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து இன்று மட்டும் காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரை சுவசமி தரிசனத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளனர்.
அதே போல் 14 மற்றும் 15 ம் தேதி நடைபெறும் தேர் மற்றும் தரிசன விழாவை கோவிலுக்குள் முடித்து கொள்வாதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. விழா முடிந்தபின்பு எப்போதும் போல் 4 மணி நேரம் விதிமுறைக்குட்பட்டு பக்தர்களுக்கு தரிசனத்திற்காக அனுமதிக்கபடுவார்கள் என கூறப்படுகிறது. இடைப்பட்ட இந்த விழா காலக்கட்டத்தில் தினமும் காலையில் 6 மணி முதல் 10 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் 8 மணி வரையிலும் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு கோவிலுக்குள் அனுமதிக்கப்டுவார்கள்.