Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் முன் ... மீனாட்சி கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கும் நேரம் அறிவிப்பு மீனாட்சி கோவிலில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் ஆனிதிருமஞ்ன விழா: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் ஆனிதிருமஞ்ன விழா: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2021
09:07

 சிதம்பரம்: கொரோனா பரவல் காரணமாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று துவங்கும் ஆனிதிருமஞ்சன விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  மேலும் தேர் மற்றும் தரிசன விழாவும் கோவிலுக்குள் நடத்திக்கொள்வதாக தீட்சிதர்கள் முடிவு எடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொறு ஆண்டும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்படும்.  இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா, இன்று காலை 6 ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 7 மணியில் இருந்து 8 மணிக்குள் உற்சவ ஆச்சாரியார் பிரம்மஸ்ரீ கனகசபேச தீக்ஷிதர்,  கொடி ஏற்றி துவக்கி வைக்கிறார். வரும் 14 ம் தேதி தேர் திருவிழாவும், 15 ம் தேதி ஆனிதிருமஞ்சன தரிசன விழாவும் நடைபெற உள்ளது. கொரோனா விதிமுறை காரணமாக கொடி ஏற்ற விழாவிற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என பொது தீட்சிதர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக குறை நபர்களை கொண்டு கொடி ஏற்று விழாவை முடிக்க கோவில் பொது தீட்சிதர்கள் முடிவு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து இன்று மட்டும் காலை  9 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரை சுவசமி தரிசனத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளனர்.  

அதே போல் 14 மற்றும் 15 ம் தேதி நடைபெறும் தேர் மற்றும் தரிசன விழாவை கோவிலுக்குள் முடித்து கொள்வாதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. விழா முடிந்தபின்பு எப்போதும் போல் 4 மணி நேரம் விதிமுறைக்குட்பட்டு பக்தர்களுக்கு தரிசனத்திற்காக அனுமதிக்கபடுவார்கள் என கூறப்படுகிறது. இடைப்பட்ட இந்த விழா காலக்கட்டத்தில் தினமும் காலையில் 6 மணி முதல் 10 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் 8 மணி வரையிலும் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு கோவிலுக்குள் அனுமதிக்கப்டுவார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா நிறைவை முன்னிட்டு புஷ்பயாகம் நடந்தது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு கோவிலில் இன்று நடந்த பட்டினத்தார் சிவபூஜை  செய்யும் நிகழ்வில் திரளான ... மேலும்
 
temple news
திருமலை; இனிமேல், ஸ்ரீவாரி பக்தர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏழுமலையானை தரிசனம் செய்யமுடியும். இந்தப் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் 63 நாயன்மார்களுக்கு குருபூஜை விழா ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.ஆக.5ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar