தொண்டி : தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயிலில் ஆனி ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் மலர்களால் அலங்கரிக்கபட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.