Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐந்தொழில் நடராஜர் திருவாசகம் தந்த திருவாதவூர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருவனந்தபுரம் சபாபதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2021
06:07


 திருவனந்தபுரம் சபாபதி கோயிலில் ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜர் அருள்பாலிக்கிறார். பக்தர்கள் இவரை தட்சிணாமூர்த்தியாக கருதி கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடுகின்றனர்.
   திருவனந்தபுரம் மூலம் திருநாள் மகாராஜா காலத்தில் பத்மநாப சுவாமி கோயில் பூஜைக்காக நந்தவனம் அமைக்கப்பட்டது. அந்த இடத்தில் பழங்காலத்தில் உருவாக்கப்பட்ட பஞ்சலோக நடராஜர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில் ஒன்று இருந்தது. ஆனால் அதற்கு வழிபாடு ஏதும் நடக்கவில்லை. நாளடைவில் நந்தவனத்தைச் சுற்றி குடியிருப்பும், கடைகளுமாக உருவானது. அங்கு குடியிருப்போர், வியாபாரிகள் பல இடைஞ்சல், சோதனைக்கு ஆளாயினர். தீர்வு வேண்டி தேவ பிரசன்னம் பார்த்தனர். நடராஜருக்கு வழிபாடு நடக்காததும், நடராஜர் கோயிலுக்கு எதிரில் அரை கி.மீ., துாரத்தில் உள்ள முத்தாரம்மனின் உக்ர பார்வையும் தான் சோதனைக்கான காரணங்கள் எனத் தெரிய வந்தது. இந்த இரு கோயில்களுக்கு நடுவில் அட்சய பாத்திரம் தாங்கிய அம்பாள் பிரதிஷ்டை செய்தால் பிரச்னை நீங்கும் என பிரசன்னத்தில் கூறப்பட்டது. அதன்படி நடராஜருக்கு நேர் எதிரில் அம்பாள் சிலை பிரதிஷ்டை செய்ததோடு நடராஜருக்கு நித்யபூஜை நடத்த ஏற்பாடு செய்தனர். இதன்பிறகு அப்பகுதியில் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டது.  
   கன்னியருக்கு திருமணத்தடை  நீங்கவும், திருமணமான பெண்களுக்கு சுமங்கலி பாக்கியம் நிலைக்கவும், குழந்தைகள் கல்வி மேம்படவும், சித்தபிரமை நீங்கவும் நடராஜருக்கு திருவாதிரை நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனத்தன்று சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, திருவாதிரை களி நைவேத்யம் செய்கின்றனர். தினமும் மஞ்சச்சோறு (பொங்கல்), பஞ்சாமிர்த நைவேத்யம் செய்யப்படுகிறது. கேரள மக்கள் நடராஜரை தட்சிணாமூர்த்தியின் அம்சமாக கருதுவதால் திங்கள், வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை மாலை சாத்துகின்றனர். தாரா பாத்திரத்தில் புனித நீர் ஊற்றி குளிர்விக்கும் ஜலதாரை வழிபாடும் இங்குண்டு. இதைச் செய்தால் நீண்டகால நோய், எமபயம், வீண்கவலை மறையும்.   
எப்படி செல்வது
* திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷன் இரண்டாவது வாசல் (டெர்மினல்) கேட் எதிரிலுள்ள பவர் ஹவுஸ் சாலையில் உள்ளது.
* தம்பானுார் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ.,

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar