Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவனந்தபுரம் சபாபதி குண்டுக்குள் கோயில்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருவாசகம் தந்த திருவாதவூர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2021
06:07


திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பார்கள். பக்தி மணம் கமழும் இந்தப் பாடலைப் பாடிய மாணிக்கவாசகர் அவதரித்த ஊர் திருவாதவூர். இங்கு குடிகொண்டிருக்கும் திருமறைநாதரை தரிசிப்போம்.
அசுரர்களின் கொடுமை தாளாமல் தேவர்கள் திருமாலிடம் தஞ்சம் புகுந்தனர். இதை அறிந்த அசுரர்கள் திருமாலுக்குப் பயந்து, பிருகுவின் மனைவியான காவ்யமாதாவிடம் அடைக்கலம் புகுந்தனர். அசுரர்களை ஒப்படைக்கும்படி திருமால் காவ்யமாதாவிடம் வேண்ட அவள் மறுத்தாள். கோபத்தில் திருமால் சக்கரத்தை ஏவி அவளது தலையைக் கொய்தார். மனைவியை இழந்த பிருகு, “திருமாலே! உன் மனைவியை நீயும் பிரியக் கடவது,” என சாபமிட்டார். சாபம் தீர பூலோகத்தில் தவமிருந்த திருமால் சிவலிங்கத்தை பூஜித்து வந்தார். அத்தலம் திருவாதவூர் என்றும், சுவாமி திருமறைநாதர் என்றும் பெயர் பெற்றது.      
 சிவனைப் பாடிய நால்வரில் மாணிக்கவாசகர் குறிப்பிடத்தக்கவர். இந்த ஊரின் பெயரால் அவருக்கு ‘திருவாதவூரார்’ என்றும் பெயருண்டு. அரிமர்த்தனபாண்டியனிடம் அமைச்சராக இருந்த இவர், பாண்டிய நாட்டிற்கு குதிரை வாங்கச் சென்ற இடத்தில், சிவபெருமானே குருநாதராக காட்சியளித்து உபதேசித்தார். கோவணம் உடுத்தி கையில் திருவாசகம் தாங்கியகோலத்தில் மாணிக்கவாசகரை இங்கு தரிசிக்கலாம்.   
 திருமறைநாதருக்கு வலதுபுறம் சன்னதியில் ஆரணவல்லித்தாயார் அருள்புரிகிறாள். இவளுக்கு வேதநாயகி, மறைநாயகி என்றும் பெயருண்டு. கபில விநாயகர், கஜமுக கணபதி, நாகேஸ்வரர், காளீசர், சிந்தாமணி கணபதி, சுப்பிரமணியர், சூரியன், தட்சிணாமூர்த்தி, நால்வர் சன்னதிகள் இங்கு உள்ளன. பைரவருக்கு இங்கு வழிபட்டதன் பயனாக நாயை வாகனமாக அடைந்தார். திருமறைநாதரை வழிபட்ட சனீஸ்வரர் வாதநோய் நீங்கப் பெற்றார்.  சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் விளக்கேற்ற வாதநோய், சனிதோஷம் நீங்கும். காவல் தெய்வமான புருஷாமிருகத்தின் சிலை விஷ்ணுதீர்த்தத்தின் நடுவில் உள்ளது.
எப்படி செல்வது :
* மதுரையிலிருந்து திருவாதவூர் 25 கி.மீ.,
* மேலுாரில் இருந்து 10கி.மீ.,

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ஆணவம் கூடாது ஏப்ரல் 21,2026

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத்.  இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். ... மேலும்
 

சாமர்த்தியம் ஏப்ரல் 21,2026

ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ... மேலும்
 

முதல் மாதம் ஏப்ரல் 21,2026

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. ... மேலும்
 
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின ... மேலும்
 
* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar