Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரந்தையில் வருடாபிஷேக விழா வாராகி மந்திராலயத்தில் ஆனி நவராத்திரி விழா வாராகி மந்திராலயத்தில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் தேர் திருவிழா ரத்து: கோவிலுக்குள் நடத்த தீட்சதர்கள் முடிவு
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் தேர் திருவிழா ரத்து: கோவிலுக்குள் நடத்த தீட்சதர்கள் முடிவு

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2021
08:07

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டதை அடுத்து கோவிலுக்குள்ளே நடத்திக்கொள்ள பொது தீட்சிதர்கள் முடிவு செய்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 6 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா பரவல் காரணமாக சுவாமி வீதிஉலா உள்ளிட்ட பல்வேறு பூஜை நிகழ்வுகள் வெளியில் கொண்டுவர படாமல் பக்தர்கள் பங்கேற்று கோவிலுக்குள் ஆகவே நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் பக்தர்கள் பங்கேற்புடன் தேர் மற்றும் தரிசன விழாவை நடத்த வேண்டும் என பா.ஜ ., இந்து முன்னணி, பக்தர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் மனு அளிப்பு போராட்டம் செய்து வந்தனர். இறுதியாக நேற்று முன்தினம் சிதம்பரம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏ பாண்டியன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனாலும் தேர் மற்றும் தரிசன விழாவை வழக்கம்போல் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இதன் காரணமாக இன்று நடைபெறும் தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டதுடன் கோவிலுக்குள்ளே நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இன்று நடைபெறும் தேர் திருவிழாவையொட்டி இது காலை 5 மணிக்கு மேல் நடராஜரும் சிவகாம சுந்தரியும் சித் சபையில் இருந்துபுறப்படுகின்றனர் . அதனைத் தொடர்ந்து உள் பிரகாரத்தை வலம் வரும் சுவாமி அங்கிருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள உள்ளார். அதன் பின்பு காலை 9 மணி முதல் 2 மணி வரை சுவாமியை தரிசிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அதன் பின்பு பக்தர்கள் அனுமதி முற்றிலுமாக நிறுத்தப்படும். தொடர்ந்து தரிசன நாளான 15ஆம் தேதி அதிகாலை வழக்கம்போல் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது. அதன் பின்பு மதியம் 2 மணி அளவில் தரிசன விழா நடைபெறுகிறது. அதில் நடராஜரும் சிவகாம சுந்தரியும் நடனமாடியபடி சன்னதிக்கு செல்வார் கள். அதன் பின்பு சுவாமிஜி சபைக்கு சென்றபின் 3 மணியிலிருந்து சுவாமி தரிசனத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தொடர்ந்து 10 மணி வரை பொதுமக்கள் சுவாமியை தரிசிக்கலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தை மாதத்த பிரம்மோற்சவ விழாவிற்கு உத்தரவு வாங்குவதற்காக சென்னை கந்தகோட்ட ம் முத்துக்குமார ... மேலும்
 
temple news
பாலக்காடு; ​கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில் கங்கையின் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar