Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி திரிலிங்க சச்சிதானந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் 28ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் 28ம் தேதி கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

22 ஜன
2026
10:01

ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் வரும் 28ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.


கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் தாலுகா, ஆதிதிருவரங்கம் கிராமத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ஸ்ரீரங்கம் கோவிலை விட மிக பழமைவாய்ந்த இக்கோவிலில் தமிழகத்திலேயே மிகப்பெரிய அளவிலான 27 அடி நீள நவபாஷனத்தில் உருவாக்கப்பட்ட அரங்கநாத பெருமாள் சயன நிலையில் மூலவராக அருள்பாலிக்கிறார். மூலவர் அரங்கநாத பெருமாளுடன் கருடாழ்வார், சரஸ்வதி, பிரம்மா உள்ளிட்ட சுவாமிகளும் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில் சந்திர புஷ்கரணி தீர்த்தமாக வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் உள்ள பெரிய அளவிலான தானியக்களஞ்சியம் சிறப்பு வாய்ந்ததாகும்.


இக்கோவில் சேதமடைந்த நிலையிலும், தைலகாப்பு மேற்கொள்ளப்படாமல் மூலவர் சுவாமியும் இருந்தது. வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முயற்சியால் இக்கோவிலை புனரமைத்து, மூலவருக்கு தைலகாப்பும், புதிய தேர் உருவாக்க அறநிலையத்துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த ஆண்டு திருப்பணிகள் துவங்கியது. கோவில் சுற்றுச்சுவர், கோபுரம், நெற்களஞ்சியம் ஆகியவை பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 26ம் தேதி கோ பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்க உள்ளது. தொடர்ந்து, யஜமான சங்கல்பம், புண்ணியாகவஜனம், வாஸ்துசாந்தி, பூர்ணாஹூதி, அக்னி பிரதிஷ்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், 27ம் தேதி மகா சாந்தி, சப்த கலச ஸ்நாபனம், திருமஞ்சனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. 28ம் தேதி காலை 10 மணியளவில் கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படு கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் செய்து வரு கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று சதுர்த்தி விரதம். முகுந்த, வர சதுர்த்தி. தை அமாவாசைக்கு பின் வரும் சதுர்த்தி வரசதுர்த்தி ஆகும். ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி ஐ.டி.ஐ., எதிரில் மரக்காயர்பட்டணம் பகுதியில் சீதாராம சுவாமிகள் ஞான யோகானந்த ஆசிரமம் ... மேலும்
 
temple news
திருப்பத்துார்: திருப்பத்துார், தனியார் கல்லுாரியின், தமிழ்த்துறை பேராசிரியர் மோகன் காந்தி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar