Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கோவில் தெப்பக்குளம் தூர் வாரும் பணி ... குற்றாலம் கோயிலில் மூலிகை மருந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாளை கோயிலில் ஜூலை 1ம் தேதி கும்பாபிஷேக பூஜை துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2012
10:06

திருநெல்வேலி:பாளை., மேலவாசல் பிரசன்ன விநாயகர் கோயில், சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் ஜூலை 5ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்திற்காக பிரமாண்ட யாகசாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது.பாளை., மேலவாசல் பிரசன்ன விநாயகர் கோயில், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல லட்ச ரூபாய் செலவில் திருப்பணி வேலைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வரும் ஜூலை 5ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரமாண்ட யாகசாலைகள், ஹோம குண்டங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. கும்பாபிஷேக விழா ஜூலை 1ம் தேதி அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், பஞ்சகவ்யம், தனபூஜை, தேவதா அனுக்கை, கணபதிஹோமம், பிரம்மச்சாரி பூஜை, கஜ பூஜை, கோ பூஜை, தீபாராதனை நடக்கிறது. மாலையில் விக்னேஸ்வரங பூஜை, தீர்த்த சங்கிரஹணம், பிரவேசபலி, வாஸ்துசாந்தி, தீபாராதனை நடக்கிறது. 2ம் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜை துவங்குகிறது. தொடர்ந்து யாகசாலை பூஜைகளும், சிறப்பு ஹோமங்களும் நடக்கிறது.5ம் தேதி கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, 6வது கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், திரவ்யாகுதி, யாத்ரா தானம், கும்பம் எழுந்தருளல், காலை 11 மணிக்கு விமான கோபுரம், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 12 மணிக்கு மகா அபிஷேகமும், அன்னதானமும் நடக்கிறது. இரவு திருக்கல்யாணம், பிரசன்ன விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை அம்பாள் வீதியுலா நடக்கிறது.கும்பாபிஷேகத்தை தூத்துக்குடி வேதபாடசாலை முதல்வர் செல்வம் பட்டர், கோயில் அர்ச்சகர்கள் குமார் பட்டர், ராமகிருஷ்ணன் குழுவினர் நடத்திவைக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar