Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
17 அடி உயர முனீஸ்வரனுக்கு பால் ... எல்லையம்மனுக்கு கூழ்வார்த்தல்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான கோவிலில் அதிகாரிகள் குழு ஆய்வு! திருப்பணிகள் துவங்கும் என எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2021
02:08

உடுமலை: பழமை வாய்ந்த கண்டியம்மன் கோவிலை, புதுப்பிக்க, இந்து அறநிலையத்துறையினர் பல கட்ட ஆய்வு நடத்தியுள்ள நிலையில், அரசு விரைவில் நிதி ஒதுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.உடுமலை சோமவாரப்பட்டியில், பழமை வாய்ந்த கண்டியம்மன் கோவில் உள்ளது. உப்பாறு படுகை வரலாற்றின் ஆவணமாக காணப்படும் இந்த கோவில், போதிய பராமரிப்பில்லாமல், பொலிவிழந்து வருகிறது.


இருகருவறை; ஒரே தெய்வம் என பல்வேறு சிறப்புகளை பெற்ற கோவிலின் முன்மண்டபம், கோபுரம், மேற்கூரை பழுது, கொடி மரத்தில் விரிசல், தரைதளம் சிதிலம் உட்பட கோவிலில் தற்போது பல்வேறு பிரச்னைகள் உள்ளது.கோவிலை பாதுகாக்கும் வகையில், பக்தர்கள், தாங்களாக ஒருங்கிணைந்து, சில மேம்பாட்டுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், கோவிலை முழுமையாக புதுப்பிக்க, இந்து அறநிலையத்துறை வாயிலாக, அரசு நிதி ஒதுக்கீடு செய்வது அவசியமாகியுள்ளது.இக்கோவில் திருப்பணிகளை, 14வது நிதி ஆணைய நிதி ஒதுக்கீட்டில், மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, கடந்த, 2015ல், ஆய்வு செய்யப்பட்டது.அப்போது, பழமை வாய்ந்த கோவிலாக இருப்பதால், விதிமுறைகளின்படி, தொல்லியல் துறையின் தொழில்நுட்ப கருத்துரு பெற்ற பிறகே, துறை சார்பில், மதிப்பீடு தயாரிக்கப்பட வேண்டும்.தொல்லியல் வல்லுனர்கள், கோவிலில் ஆய்வு மேற்கொண்டு, தொன்மை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அறிக்கை அடிப்படையில், கல்கட்டுமானமாக உள்ள கோவில், முழுவதுமாக பிரித்தெடுக்கப்பட்டு, விரிவான முறையில், முழுமையாக திருப்பணி மேற்கொள்ளப்படும், என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.பின்னர் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது, தமிழக அரசு, பழமையான, நுாறு கோவில்களில், உடனடியாக திருப்பணி துவக்கப்படும் என தெரிவித்துள்ளது.அதன்படி, கண்டியம்மன் கோவிலிலும், சமீபத்தில், ஆய்வு செய்து, கோவிலின் தற்போதைய நிலை குறித்த, அறிக்கை தயாரிப்பதற்கான தகவல்களை சேகரித்து சென்றுள்ளனர்.இதனால், கண்டியம்மன் கோவில் திருப்பணிக்காக, அரசு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் துவங்கும் என்ற எதிர்பார்ப்பில், அப்பகுதி மக்கள் உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழாவில் 8ம் நாளான இன்று மதியம் ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில், விநாயகர் சிம்ம வாகனத்தில் வீதி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே குத்துக்கல்வலசையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லுரில் புகழ் பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை; பூங்கா நகர், தங்க சாலை தெருவில் உள்ள காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் மஹா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar