Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மனக்கவலைகள் போக்கும் வன்னி விநாயகர் ... வளையல் அலங்காரத்தில் அலர்மேல் மங்கை தாயார் அருள்பாலிப்பு வளையல் அலங்காரத்தில் அலர்மேல் மங்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எனக்கு கிடைத்த பாக்கியம்: புதிய அர்ச்சகர் நெகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
எனக்கு கிடைத்த பாக்கியம்: புதிய அர்ச்சகர் நெகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

19 ஆக
2021
09:08

மதுரை: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்தின்கீழ் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட கீழமாசிவீதி தேரடி கருப்பசாமி கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டவர் அருண்குமார் 29.

மதுரை ஆனையூரைச் சேர்ந்த இவர் 2006ல், வேத மந்திரங்கள் கற்றுக்கொண்டு 15 ஆண்டுகளாக வருமானவரி காலனி குடியிருப்பு, அவனியாபுரம் பாலமீனாம்பிகை கோயில்களில் அர்ச்சகராக இருந்து வந்துள்ளார். தற்போது அரசால் தரப்பட்ட பணி வாய்ப்பு குறித்து அவர் கூறியதாவது: தினமும் காலை 8:00 முதல் 11:30 மணி வரை, மாலை 5:30 முதல் இரவு 8:15 மணி வரை பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சம்பளம் ரூ.11,400. கடவுளுக்கு தினமும் பூஜை செய்வதை பாக்கியமாக கருதுகிறேன், என்றார்.

*திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துபட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில், அதன் உப கோயில்கள் ஹிந்து அறநிலையத்துறை வசம் உள்ளன. இங்கு இதே ஊரைச் சேர்ந்த வேளாளர், மூப்பனார் சமூகத்தினர் பூஜை செய்து வந்தனர்.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தில், காளியம்மன், பகவதியம்மன் கோயிலுக்கு விக்ரம் என்பவரையும், சுப்பிரமணியர், விநாயகர் கோயில்களுக்கு கலையரசன் என்பவரையும் அர்ச்சகராக அரசு நியமித்துள்ளது. இருவரும், பழநி பாடசாலையில் 2007 - -08 ஆண்டில் ஓராண்டு இளநிலை அர்ச்சகர் பயிற்சி பெற்றுள்ளனர். நேற்று முன்தினம் (ஆக.16) பொறுப்பேற்று, வழக்கமான நேரத்தில் கோயில் திறப்பு, மூன்று கால பூஜைகளை நடத்தி வருகின்றனர். சம்பளமின்றி, பரம்பரையாக பூஜை நடத்தி வந்த உள்ளூர் அர்ச்சகர்கள் அதிருப்தியால் கோயிலுக்கு வருவதை தவிர்த்து விட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar