Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமர் கோயில் கட்டுமானம் ... திரவுபதி அம்மன் கோவில் வருடாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்ன இலந்தை குளத்தில் நடுகல், ஆழிக்கல் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
சின்ன இலந்தை குளத்தில் நடுகல், ஆழிக்கல் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

19 ஆக
2021
02:08

மதுரை : அலங்காநல்லுார் அருகே சின்ன இலந்தைகுளத்தில் மிகப்பழமையான நடுகற்கள், நிலக்கொடை எல்லை குறிக்கும் திருமால் சக்கரம் போன்ற ஆழிக்கல்லை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

மதுரை தொல்லியல் ஆய்வு சங்க ஆய்வாளர் தேவி, கோயில் கட்டடக் கலை, சிற்பத்துறை அறிவுச்செல்வம், பாண்டியர்கள் தேடி பயணம் குழு ஆய்வாளர்கள் மணிகண்டன், பேச்சிமுத்து, விக்கிரமன்யுவராஜ், பாலா கூறியதாவது: சின்ன இலந்தைகுளம் வயலில் உள்ள நடுகல்லில்ஆண், பெண் சிற்பம் செதுக்கியுள்ளனர். பெண் சிற்பம் வலது கொண்டை, நெற்றிச்சுட்டி, சூரிய, சந்திர பிறை, காது, கழுது அணி,வளையல், வலது கைபூவுடன்கடக ஹஸ்தத்துடன் காணப்படுகிறது.

ஆண் சிற்பம் ஈட்டி பிடித்து, தோள்வளை, கேயூரம் காப்பணிந்து முறுக்கு மீசையுடன் வைஷ்ணவம் எனும் ஸ்தானக நிலையில் காணப்படுகிறது. இக்கல் அருகே கொண்டை, நெற்றிப்பட்டை, காதில் பூ, தண்டட்டி, கண்டிகை கழுத்து அணியுடன், கையில் கேயூரம், தோள்வளை, இரட்டை காப்பு, உருட்டும் விழி, முறுக்கிய மீசை, குறுவாள் ஒன்றும் வைத்தபடியும், இடது கையில் வில்லும், வலது கை அம்பு எடுப்பது போன்றும் ஒரு வீரனுக்குரிய உருவ அமைப்புடன் தனியாக நிற்கும் ஆண் சிற்ப நடுகல் உள்ளது. பெருமாள் விண்ணகரங்களுக்கு வழங்கிய நிலக்கொடை எல்லையை குறிக்கும் திருமாலின் சக்கரம் போன்ற அமைப்புள்ள மூன்றரை அடி உயர திரு ஆழிக்கல் ஒன்றும் கண்டறிந்தோம். அதன் மூன்று பக்கங்களில் சக்கரம், மற்றொரு பக்கம் சக்கரம், குடை செதுக்கப்பட்டுள்ளது. மேலும் மரத்தடியில் இரு பெண் சிற்பங்கள் புதைந்த நிலையில் உள்ளன என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar