Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சின்னாளபட்டி கோயிலில் வரலட்சுமி ... கோவில் அதிகாரிகளுக்கு கமிஷனர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
16ம் நுாற்றாண்டு சூல கற்கள் உத்திரமேரூரில் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2021
05:08


 உத்திரமேரூர்:உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர், உத்திரமேரூர் அடுத்த கடல்மங்கலம் கிராமத்தில், 16ம் நுாற்றாண்டை சேர்ந்த எல்லை கற்களை கண்டெடுத்தனர்.

உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர்கொற்றவை ஆதன் கூறியதாவது.கடல் மங்கலம்கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டோம். அங்குள்ள பாட்டி அம்மன் கோவில் அருகில், நிலத்தின் எல்லையை குறிக்கும், 16ம் நுாற்றாண்டை சார்ந்த, 2 அடி அகலம், 1.5 அடி உயர வாமனக்கல்லை கண்டெடுத்தோம். இது விஜயநகர மன்னர்களின் காலத்தை சார்ந்தது.மன்னர்கள், பெருமாள் கோவிலுக்கு நிலத்தை தானமாக வழங்கும்போது, அப்படி வழங்கப்பட்ட நிலத்தின் எல்லையை குறிக்கும் அடையாளமாக அதில், விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரமான வாமன உருவம் பொறித்த கல்லை நடுவார்கள்.மேலும், அழிஞ்சல் காட்டுப்பகுதி சிவன் கோவில்களுக்கு தானமாக வழங்கப்படும் நிலத்தின் எல்லையைக் குறிக்கும் சூலக்கல் ஒன்றை கண்டறிந்தோம். இதேபோன்ற சூலக்கல்லை, பாப்பாத்தி குட்டை அருகில் கண்டெடுத்தோம்.இவை, 1.5 அடி அகலம், 1 அடி உயரம் கொண்டவையாக உள்ளன. இரு சூலக்கற்களிலும் சூரியன், சந்திரன், சிவலிங்கம் ஆகிய உருவங்கள்இடம் பெற்றுள்ளன. தானத்திற்கு குறியீடாக இவற்றை பொறிப்பர்.ஒரே ஊரில் பெருமாள் மற்றும் சிவன் கோவிலுக்கு, நில தானம் அளித்த கற்கள் இருப்பதை நாங்கள் கண்டறிவது முதல்முறை.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (26ம் ... மேலும்
 
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 
temple news
விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் ... மேலும்
 
temple news
எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கியே துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், கனி வகைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar