Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ... சிவாலயபுரத்தில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு சிவாலயபுரத்தில் தேய்பிறை அஷ்டமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலுாரில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
கடலுாரில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

31 ஆக
2021
11:08

கடலுார் : கடலுாரில் உள்ள கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு ஆராதனைகள் நடந்தனதிருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் ருக்மணி, சத்யபாமா சமேத ராஜகோபாலசாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

மாலை சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். புதுப்பாளையம் செங்கமலத்தாயார் சமேத ராஜகோபாலசாமி கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராய் ராஜகோபாலசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பாதிரிபுலியூர் ருக்மணி சத்யபாமா சமேத கண்ணபிரான் கோவிலில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில், கிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் விசேஷ பூஜைகள் நடந்தன. மாலை ருக்மணி சத்யபாமா மற்றும் கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இன்று (31ம் தேதி) மாலை சுவாமிக்கு திருக்கல்யாணமும், 1ம் தேதி மாலை ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் நேற்று மதியம் 12:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின், கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 5:00 மணிக்கு உறியடி திருவிழா நடந்தது. நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவில், சி.என்.பாளையம் வரதராஜபெருமாள் ஆகிய கோவில்களில் கோகுலாஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.சிதம்பரம்: மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பில் நடந்த விழாவிற்கு விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாவட்டத் தலைவர் ஜெய முரளி கோபிநாத் தலைமை தாங்கினார். விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாவட்ட செயலாளர் ஜோதி குருவாயூரப்பன், மாவட்ட பொருளாளர் முத்துக்குமரன, பா.ஜ.,மாநில செயற்குழு உறுப்பினர் ராஜரத்தினம், முன்னாள் மாவட்டத் தலைவர் தாமரை மணிகண்டன், வெங்கடேச தீட்சிதர், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில பொறுப்பாளர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar